முன்னோடித் தலைமுறை அட்டை - குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்தலாம்

கொவிட்-19 கிருமிப்பரவலுக்கிடையே மூத்தோரை வீட்டிலேயே தங்க ஊக்குவிப்பதற்காக, ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் முன்னோடி தலைமுறைத் திட்டத்தைக் கொண்டுள்ள மூத்த குடும்ப உறுப்பினர்களின் சார்பாக குடும்பத்திலுள்ள மற்றவர்கள் பொருள் வாங்கி சலுகைகளைப் பெறலாம் என்று ஃபேர்பிரைஸ் பேரங்காடி அறிவித்துள்ளது.

மூன்று விழுக்காடு தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர்கள் திங்கட்கிழமை அல்லது புதன்கிழமையின்போது தங்களது குடும்ப உறுப்பினர்களின் முன்னோடித் தலைமுறை அட்டையை ஃபேர்பிரைஸ் அல்லது யூனிட்டி கடைகளில் காட்டவேண்டும்.

கடந்த ஆண்டின் நோய்ப்பரவல் முறியடிப்புத் திட்டத்தின்போது அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சலுகை, அடுத்த திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை கொடுக்கப்படும்.

கிருமித் தொற்றுகள் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முதியவர்களை வீட்டிலேயே தங்கும்படி கொவிட்-19 அமைச்சர்நிலை பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது. இன்னும் தடுப்பூசி போடாத சுமார் 140,000 பேர் மீது கவனம் செலுத்தப்படும் என்று சிங்கப்பூரின் தடுப்பூசித் திட்டம் கவனம் செலுத்தும். “70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என அக்கறையுடன் காண்கிறோம்,” என்று ஃபேர்பிரைஸ் பேரங்காடி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியென் பெங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!