சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை ஏற்றம் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மெதுவடைந்தது.
தரை வீடுகளின் விலை குறைந்ததும் முடுக்கிவிடப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளால் குறைவான எண்ணிக்கையில் புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதும் இதற்குக் காரணம்.
தனியார் வீடுகளின் விலை சென்ற காலாண்டில் 0.8 விழுக்காடு அதிகரித்தது.
இந்த ஆண்டு முதல் காலாண்டில் விலை 3.3 விழுக்காடும் சென்ற ஆண்டு இறுதி காலாண்டில் 2.1 விழுக்காடும் அதிகரித்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
முன்னோடி மதிப்பீட்டின்படி சென்ற காலாண்டில் தனியார் வீடுகளின் விலை 0.9 விழுக்காடு அதிகரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் தனியார் வீடுகளின் விலை 7.1 விழுக்காடு அதிகரித்தது.
சென்ற காலாண்டில் விற்பனையான தரை வீடு அல்லாத புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு குறைந்தது. எக்சிகியூடிவ் கூட்டுரிமை வீடுகளின் விற்பனை அதில் அடங்காது.