உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடப்பில் இருப்பதால் ராணுவ உடற்பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ராணுவ முகாம்களில் நடத்தப்படும் பயிற்சிகள், தயார்நிலையில் இருக்கும் தேசிய சேவையாளர்களுக்கான தனிநபர் உடலுறுதிச் சோதனைகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தயார்நிலையில் உள்ள தேசிய சேவையாளர்களுக்கான முகாம் பயிற்சிகளும் அடுத்த மாதம் 18ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. செயல்முறைக்கு அவசியமான பயிற்சிகள் இதற்கு விதிவிலக்கு.
எஃப்சிசி எனப்படும் உடலுறுதிச் சோதனைக்காகப் பயிற்சிகளை நடத்தும் ராணுவ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும்.
ஆனால், மெய்நிகர் வடிவில் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் தனிநபர் உடலுறுதிச் சோதனைக்கான நிபந்தனைகளை தேசிய சேவையாளர்கள் பூர்த்திசெய்யவேண்டியது விதிமுறை. பாதிக்கப்பட்டோருக்கு இந்த ஒரு முறை மட்டும் அந்த நிபந்தனை அகற்றப்படுகிறது.
நேற்று முன்தினம் சிங்கப்பூரில் மீண்டும் உயர்த்தப்பட்ட இரண்டாம் கட்ட விழிப்புநிலை நடைமுறைப்படுத்தப்பட்டது. முடுக்கிவிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடப்பில் இருக்கும்.