மாற்றுக் கருத்து செய்தி நிறுவனமான டீஓசி என்றழைக்கப்படும் தி ஓன்லைன் சிட்டிசன், மன்னிப்பு கேட்குமாறு அதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மறதி நோய்க்கு ஆளான ஒரு மூதாட்டியி இடம்பெற்ற காணொளியை டீஓசி அதன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதன் தொடர்பில் மன்னிப்பு கேட்குமாறு மூதாட்டியின் மகன் கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த மே மாதம் ஈஷூனில் நிகழ்ந்த ஒரு சம்பவம் காணொளியில் இடம்பெற்றிருந்தது. அதில் காவல்துறையினர் மூதாட்டியை தொந்தரவு செய்ததாக டீஓசி கூறியது. காவல்துறையினர் மற்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் டீஓசியின் அந்தச் செயலை வன்மையாகக் கண்டித்தனர்.