மாண்ட ரிவர் வேலி ஹை பள்ளி மாணவருக்குப் பிரார்த்தனை

மாண்ட ரிவர் வேலி ஹை பள்ளி மாணவருக்குப் பிரார்த்தனை

1 mins read
d6e0849d-36be-4ac0-976e-cdf9b0ce8fa0
மாண்ட ரிவர் வேலி ஹை பள்ளி மாண­வ­ருக்­கா­க­வும் சிங்­கப்­பூ­ரிள் அனைத்து மாண­வர்­க­ளின் பாது­காப்­பிற்­கா­க­வும்அமைச்­சர்­ மாலிக்கி ஓஸ்­மான், சமயத் தலை­வர்­க­ளு­டன் சேர்ந்துபங்­கேற்­கும் கூட்­டுப் பிரார்த்­தனை. படம்: ஸ்ட்­ரெ­யிட்ஸ் டைம்ஸ் -

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று கொல்­லப்­பட்ட ரிவர் வேலி ஹை பள்ளி மாண­வ­ருக்­காக 10 சம­யத் தலை­வர்­க­ளு­டன் கூட்­டுப் பிரார்த்­த­னை­யில் ஈடு­பட்­டார் பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும், கல்வி, வெளி­ய­றவு அமைச்­சு­க­ளுக்­கான இரண்­டாம் அமைச்­ச­ரு­மான மாலிக்கி ஓஸ்­மான்.

இந்த 10 சமயத் தலைவர்களும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்கள்.

கூட்­டுப் பிரார்த்­த­னைக்கு சமய நல்­லி­ணக்க அமைப்பு ஏற்­பாடு செய்­தது.

பயம், சுய­ந­லம், பிற இனத்­த­வருக்கு எதிராக இருக்­கக்­கூ­டிய வெறுப்பு, போன்ற உணர்­வு­களை அடி­யோடு மறுக்­கு­மாறு திரு மாலிக்கி சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

இனங்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு, மனித இனத்­திற்கும் சமுதாயத்திற்கும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லை­விட ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய மிக மோச­மான கிருமி என்று அவர் சுட்­டி­னார்.

பெளத்த, இந்து, இஸ்­லாம், கிறிஸ்­துவ, சீக்கிய, யூத சமயங்கள் உள்­ளிட்ட சமயங்களைச் சேர்ந்த தலை­வர்­கள் நேற்று நடைபெற்ற கூட்டுப் பிரார்த்­த­னை­யில் ஈடு­பட்­ட­னர்.

மாண்ட 13 வயது மாணவரின் உடல் நேற்று முன்தினம் எரி யூட்டப்பட்டது.