முதியவரை மோதிய வாகன ஓட்டுநருக்கு இரு வார சிறை

முதியவரை மோதிய வாகன ஓட்டுநருக்கு இரு வார சிறை

1 mins read
75d548bc-dddb-447f-81be-c2ab42f6d34b
-

பாத­சா­ரி­கள் சாலை­யில் நடந்­து­செல்­வதை 73 வயது ஓட்­டு­நர் ஒரு­வர் கவ­னிக்­கத் தவ­றி­னார். இத­னால் முதி­ய­வர் ஒரு­வரை அவ­ரது கார் மோதி­யது. காயங்­கள் கார­ண­மாக அந்த முதி­ய­வர் உயி­ரி­ழந்­தார்.

சோ ஆ சூன் எனும் அந்த ஆட­வ­ருக்கு நேற்று இரு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அதோடு, ஐந்து ஆண்­டு­களுக்கு வாக­னம் ஓட்ட அவ­ருக்குத் தடை விதிக்­கப்­பட்­டு உள்­ளது.

கவ­னக்­கு­றை­வாக செயல்­பட்­ட­தாக தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்றச்­சாட்டை முன்ன­தாக அவர் ஒப்புக்­கொண்­டார்.

2019 பிப்­ர­வரி 23ஆம் தேதி இரவு 8.10 மணி­ய­ள­வில் சிராங்­கூன் அவென்யூ 2 வழி­யாக சோ வாக­னத்தை ஓட்­டிக்­கொண்­டி­ருந்­தார்.

அப்­பர் சிராங்­கூன் சாலைக்கு அவர் திரும்­ப­வி­ருந்­தார். அங்கு பாத­சா­ரி­கள் கடப்­ப­தற்­கான 'ஸீப்ரா கிரா­சிங்' ஒன்று இருந்­தது.

தமக்­குப் பின்­னால் வரும் வாக­னங்­க­ளைக் காட்­டும் கண்­ணாடி மீது அப்­போது சோவின் கவ­னம் இருந்­தது.

'ஸீப்ரா கிரா­சிங்'கை பயன்­படுத்திக்­கொண்­டி­ருந்த 72 வயது திரு சாம் செக் ஹோங் மீது வாகனம் மோதி­யது.

டான் டோக் செங் மருத்­து­வ­மனைக்கு திரு சாம் கொண்டு செல்­லப்­பட்­டார். தலை­யி­லும் முது­கெ­லும்­பி­லும் அவ­ருக்­குக் காயம் ஏற்­பட்­டது. 2019 மார்ச் 1ஆம் தேதி அவர் உயி­ரி­ழந்­தார்.

விபத்து நிகழ்ந்தபோது சோ சோர்வாக இல்லை என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.