சொத்து வாங்க முனைபவர்கள் தொடர்ந்து முதிர்ச்சியடைந்த குடியிருப்பு வட்டாரங்களில் வீடு வாங்கும் வேளையில், தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளைக் (பிடிஓ) கட்டும் புதிய திட்டங்களை அதிக மதிப்புள்ள பகுதிகளில் தொடங்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு இத்தகைய 13 திட்டங்கள் தொடங்கப்பட்டதாக வீவக தெரிவித்தது. இந்த எண்ணிக்கை 2017ல் ஒன்பதாக இருந்தது.
2017ல் தொடங்கப்பட்ட பீடிஓ திட்டங்களில் 44 விழுக்காடு, முதிர்ச்சியடைந்த வட்டாரங்களைச் சேர்ந்தவை. இந்த விகிதம் 55 விழுக்காடு உயர்ந்தது என்று வீவக தெரிவித்தது. இருந்தபோதும் பீஷான், தோ பாயோ அல்லது காலாங், வாம்போ ஆகிய இடங்களில் வீடுகளை வாங்குவது சுலபமல்ல. பீடிஓவுக்கான விண்ணப்பத்திற்கான சராசரி எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 2.8 முறையிலிருந்து கடந்த ஆண்டு 6.7க்கு உயர்ந்துள்ளது.
புக்கிட் பாத்தோக், தெங்கா உள்ளிட்ட முதிர்ச்சி அடையாத வட்டாரங்களில் விண்ணப்பத்திற்கான சராசரி எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 2.1 முறையாகவும் கடந்த ஆண்டு 4.8ஆகவும் இருந்தன. ஒட்டுமொத்தமாக புதிய கட்டடங்களுக்கான தேவை கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே சீராக உள்ளது.