வேறு முதலாளியிடம் வேலை பார்க்க உதவுமாறு கேட்டு இந்த ஆண்டு ஜனவரி முதல் சென்ற மாதம் வரை பணிப் பெண்களிடம் இருந்து வீட்டு வேலை பணிப்பெண்கள் நிலையத்திற்கு 140க்கும் மேற்பட்ட விசாரிப்புகள் வந்தன.
இந்த எண்ணிக்கை 2019ல் 23 ஆக இருந்தது.
இந்நிலையில், வேலை நியமன ஒப்பந்தங்கள் முடிவடைய இருந்த நிலையிலும் கொவிட்-19 சூழலில் பல முதலாளிகளும் அத்தகைய அனுமதியைத் தர மறுத்துவிட்டதாக அரசு சாரா அமைப்புகளும் வேலை நியமன முகவைகளும் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
இப்போதைய எல்லை கட்டுப்பாடுகள் காரணமாக புதிய பணிப்பெண்களை வெளிநாடுகளில் இருந்து வேலையில் சேர்ப்பது முதலாளிகளுக்குத் தொந்தரவுமிக்கதாக இருக்கும் என்பதே இதற்கான காரணம் என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.