உரிமமற்ற இரவுநேரக் கேளிக்கை விடுதிகளிலும் உணவு பான கடைகளாக மாற அரசு மானியம் பெற்ற கேளிக்கை விடுதிகளிலும் தொடர் சோதனைகள் நடத்தப்படு வதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (ஜூலை 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்த மாதம் வரை இரண்டு வகை விடுதிகளுக்கும் எதிராக போலிசார் 202 சோதனைகளை மேற்கொண்டனர். அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் சோதனை நடைபெறுவதாக அமைச்சர் கூறினார்.
சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலிஸ் சோதனைகள் தொடரும் என்றும் அவர் சொன்னார்.