மாற்றங்களால் சிலர் குழம்பினர்

மாற்றங்களால் சிலர் குழம்பினர்

2 mins read
5359920b-09b1-4e29-9df3-963ec9e3c980
-

கொவிட்-19 நடை­மு­றை­களில் அண்­மை­யில் கொண்டு வரப்­பட்ட சில மாற்­றங்­கள், சிங்­கப்­பூர் இரண்­டாம் கட்­டத் தளர்­வுக்கு மீண்­டும் திரும்ப வழிவிட்­டுள்­ளது என்­பதை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொள்­கிறது. இது பொது­மக்­க­ளி­டையே சில குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­திவிட்டது என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக, இம்­மா­தம் 20ஆம் தேதி நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது அமைச்­சு­கள்நிலைப் பணிக்­குழு, சிங்­கப்­பூர் இன்­னும் கடு­மை­யான நடை­மு­றை­க­ளுக்கு இம்­மா­தம் 22ஆம் தேதி மீண்­டும் திரும்­பும் என்று அறி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள நிலை­மை­யைப் பொறுத்து, ஐந்து பேர் வரை ஒன்­றாக அமர்ந்து உணவு உண்­ண­லாம் என்ற புதிய அறி­விப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ஒருநாள் கழித்து இந்­தக் கடும் நட­வ­டிக்கை அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொண்டு, மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வதில் சிங்­கப்­பூர் தொடர்ந்து கடப்­பாடு கொண்­டுள்­ளது என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் வாழ்க்­கை­யை­யும் வாழ்­வா­தா­ரத்­தை­யும் மீண்­டும் பெறு­வ­தற்­கும், உல­கத்­து­டன் சிங்­கப்­பூர் மீண்­டும் தன்னை இணைத்­துக்­கொள்­வதற்­கும், நமது இளை­யர்­கள் எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் பார்ப்­ப­தற்­கும் இது­தான் ஒரே வழி என்று முடிவு எடுக்­கப்­பட்­டது.

"பிரிட்­டன் மேற்­கொண்ட வழியை சிங்­கப்­பூர் கடைப்­பி­டிக்­காது. அது அண்­மை­யில் ஒரே நேரத்­தில் அனைத்­துக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் தளர்த்­தி­யது.

"இஸ்­‌ரே­லும் நெதர்­லாந்­தும் தங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­ய­வு­டன் தொற்று எண்­ணிக்­கை­யும் மருத்­து­வ­மனைகளில் அனு­மதிக்­கப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தது. அவை இரண்­டும் மீண்­டும் தங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்­கின. நமது அணு­கு­முறை கட்­டுப்­படுத்­தப்­பட்ட ஒன்­றாக இருக்­கும், நாம் ஒரே நேரத்­தில் எல்லாக் கட்டுப்­பா­டு­க­ளை­யும் தளர்த்தப் போவ­து இல்லை. அது பெரும் பிரச்­சினையை உண்­டாக்கி­வி­டும்," என்று அமைச்சர் ஓங் விளக்கினார்.