ெகாவிட்-19 ெகாள்ளைேநாய் சூழலில் இரண்டு பள்ளிகள், இரண்டு உயர்நிலைப் பள்ளிகள், நான்கு தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட இருந்த கட்டுமான, மேம்பாட்டுப் பணிகளில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை ஈராண்டுகள் வரை தாமதாமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் மனிதவளப் பற்றாக்குறை, கட்டுமானப் பொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் ஆகியவற்றை காரணம் காட்டி கல்வி அமைச்சு நேற்று இவ்வாறு தெரிவித்தது.
ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி, தெமாசெக் தொடக்கக் கல்லூரி, ஜூரோங் பைனியர் தொடக்கக் கல்லூரி ஆகியவற்றின் புதிய கட்டடங்கள் முன்னர் 2025ஆம் ஆண்டு இறுதியில் தயாராகிவிடும் என்று கூறப்பட்டது.
தற்பொழுது இவை 2028ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம் அந்தக் கல்வி நிலையங்களின் தற்போதைய கட்டடங்களை புதுப்பிக்கவும் புதிய கட்டடங்களைக் கட்டி முடிக்கவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது என அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையே, இன்னோவா தொடக்கக் கல்லூரியின் மேம்பாட்டுப் பணிகள் ஓராண்டு தாமதமடையும் என்று கூறப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸில் உள்ள அதன் வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள் முடிந்தவடைந்த பின் இன்னோவா தொடக்கக் கல்லூரி அங்கு பழையபடி செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளி, ஹாய் சிங் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளும் முடிவடைய கூடுதலாக ஓராண்டு தேைவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அது தனது தற்காலிக வளாகத்துக்கு ஜனவரி மாதம் 2023ஆம் ஆண்டு செல்வதுடன் அங்கு அது டிசம்பர் 2024ஆம் ஆண்டு வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஃபுச்சுன் பள்ளியுடனான உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளியின் இணைப்பும் ஓராண்டுக்கு பின்னர் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஜனவரி 2025ஆம் ஆண்டு தற்பொழுது நடைபெற உள்ள இந்த இணைப்பு, மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2022 ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டுவரை மேம்பாட்டுப் பணிகள் நடக்கவுள்ள ஹாய் சிங் உயர்நிலைப் பள்ளியின் தற்காலிக வளாகத்தை தயார் செய்ய கூடுதல் கால அவகாசம் தேைவப்படுவதால் அதன் தற்காலிக வளாகம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் தயாராகும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் பள்ளியின் நிரந்தர வளாகம் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தயாராகிவிடும் என்று தற்பொழுது அமைச்சு கூறியுள்ளது.