258 உள்துறை அமைச்சுக் குழு அதிகாரிகளுக்கு உபகாரச் சம்பளம்

258 உள்துறை அமைச்சுக் குழு அதிகாரிகளுக்கு உபகாரச் சம்பளம்

1 mins read
7deb640b-13d5-4275-b8e5-8199adfd58e5
-

உயர்­கல்­வி­யைத் தொடர உள்­தறை அமைச்­சுக் குழு­வைச் சேர்ந்த 258 அதி­கா­ரி­க­ளுக்கு உப­கா­ரச் சம்­ப­ளத்­தை­யும் நிதி ஆத­ர­வை­யும்

உள்­துறை அமைச்சு வழங்­கி­யுள்­ளது. மேலும் 10 அதி­கா­ரி­க­ளுக்கு உள்­துறை அமைச்­சின் புத்­த­கப் பரிசு வழங்­கப்­பட்­டது.

உப­கா­ரச் ­சம்­ப­ளம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரி­களில் 30 வயது

பிரி­யா­தனா கல்­யா­ண­சுந்­த­ர­மும் ஒரு­வர். இவர் சிங்­கப்­பூர் சிறைத்­து­றை­யில் உள­வி­யல் நிபு­ண­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

முது­கலைப் பட்­டம் பெறு­வ­தற்­காக அவ­ருக்கு உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி குமாரி பிரி­யா­தனா லண்­ட­னில் உள்ள கிங்ஸ் கல்­லூரி­ யில் மருத்­து­வத் தட­ய­வி­யல் உள­வி­யல் துறை­யில் முது­க­லைப் பட்­டப் படிப்­பைப் பயில இருக்­கி­றார்.

போதைப்­பு­ழங்­கி­க­ளுக்கு

உள­வி­யல் ரீதி­யான ஆத­ர­வைத் தந்து அவர்­கள் வாழ்­வில் மாற்­றத்தை காண்­ப­தில் மகிழ்ச்சி அடை­யும் குமாரி பிரி­யா­தனா, உள­வி­யல் துறை­யில் கூடு­தல் திறன் பெற உள்­துறை அமைச்சு வழங்­கி­யுள்ள உப­கா­ரச் சம்­ப­ளம் வழி­வ­குத்­தி­ருப்­

ப­தா­கக் கூறி­னார்.

குமாரி பிரியாதனா கல்யாணசுந்தரம்.

படம்: உள்துறை அமைச்சு