நிறைவேறிய வேண்டுதல்: தாலியை கோயில் உண்டியலில் செலுத்த இருக்கும் மனைவி

நிறைவேறிய வேண்டுதல்: தாலியை கோயில் உண்டியலில் செலுத்த இருக்கும் மனைவி

1 mins read
226b4a3e-01d6-43a4-a63f-49d68fd083ed
அண்மையில் கணவரின் பெயரைக் கையில் பச்சைக் குத்திய திருவாட்டி வேலுத்தாயி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

2018ஆம் ஆண்­டில் தமது கண­வர் எஸ்.கே. முரு­கன் சுப்­பி­ர­ம­ணி­யத்­துக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட செய்தி கிடைத்­த­தும், அவர் உயிர் தப்­பி­னால் தமது தாலி­யைக் கோயில் உண்­டி­ய­லில் செலுத்­து­வ­தாக திரு­வாட்டி எஸ். வேலுத்­தாயி வேண்­டிக்­கொண்­டார்.

தற்­போது அவ­ரது வேண்டுதல் நிறை­வே­றி­யதை அடுத்து, தமது நேர்த்­திக்­க­டனை அவர் செலுத்த இருக்­கி­றார்.

"அவர் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­தும் புதிய வாழ்க்­கை­யைத் தொடங்க இருக்­கி­றோம். அதற்கு அடை­யா­ள­மா­கப் புதிய தாலி ஒன்றை வாங்­கப்­போ­கி­றோம்," என்­றார் திரு­வாட்டி வேலுத்­தாயி.

2015ஆம் ஆண்­டி­லி­ருந்து சிறை­யில் இருக்­கும் முரு­கன் நன்­ன­டத்தை கார­ண­மாக ஏறத்­தாழ 18 மாதங்­களில் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வார் என நம்­பப்­ப­டு­கிறது.