2018ஆம் ஆண்டில் தமது கணவர் எஸ்.கே. முருகன் சுப்பிரமணியத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும், அவர் உயிர் தப்பினால் தமது தாலியைக் கோயில் உண்டியலில் செலுத்துவதாக திருவாட்டி எஸ். வேலுத்தாயி வேண்டிக்கொண்டார்.
தற்போது அவரது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, தமது நேர்த்திக்கடனை அவர் செலுத்த இருக்கிறார்.
"அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம். அதற்கு அடையாளமாகப் புதிய தாலி ஒன்றை வாங்கப்போகிறோம்," என்றார் திருவாட்டி வேலுத்தாயி.
2015ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருக்கும் முருகன் நன்னடத்தை காரணமாக ஏறத்தாழ 18 மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என நம்பப்படுகிறது.