அமைச்சர் சான்: மனநல ஆதரவும் பேணி வளர்க்கும் சமூகமும் தேவை

அமைச்சர் சான்: மனநல ஆதரவும் பேணி வளர்க்கும் சமூகமும் தேவை

2 mins read
9b1e0c97-d0e7-4dd6-a72d-661e28ab31d2
-

மற்­ற­வர்­க­ளு­டான ஒப்­பீடு­கள் தொடர்ந்து நிகழ்ந்­து­வ­ரும் இணை­யத்­தால், சிக்­க­லான, அவ­சர உல­கில் வாழும் இன்­றைய இளை­யர்­கள் சந்­திக்­கும் சவால்­கள் இன்­னும் அதி­க­மாகி உள்­ளன என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­ இருக்கிறார்.

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்ளி­யில் நிகழ்ந்த கொலை பற்றி நாடாளு­மன்­றத்­தில் நேற்று அமைச்­சர்­நிலை அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­த­போது அவர் இவ்­வாறு கூறி­னார்.

குடும்­பம், சம­வ­ய­தி­ன­ரு­ட­னான உறவு, தங்­கள்­மீ­தும் பெற்­றோர் மீதும் கொண்­டுள்ள எதிர்­பார்ப்­பு­கள், சிங்­கப்­பூ­ரின் கடி­ன­மான கல்வி­மு­றை­யைச் சமா­ளிப்­ப­தில் உள்ள சிர­மம் ஆகி­ய­வற்­றில் ஏற்­கெ­னவே அழுத்­தங்­களை எதிர்­கொண்­டுள்ள இளை­யர்­க­ளுக்கு இன்­றைய சூழல் கூடு­தல் சமூக அழுத்­தத்­தைத் தரு­வ­தாக திரு சான் குறிப்­பிட்­டார்.

தமது அறிக்­கை­யில் இளை­யர்­களின் மன­ந­லத்­துக்கு உதவ சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் அணு­கு­மு­றை­யைப் பற்றி அமைச்­சர் எடுத்­து­ரைத்­தார்.

மன­நல உத­விக்­கான முழு­மை­யான கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­து­வது­டன் பரி­வு­டன் பேணி வளர்க்­கும் சமூ­கத்தை உரு­வாக்­கு­வ­தும் சிங்­கப்­பூ­ரின் அணு­கு­முறை என்று அவர் விளக்­கி­னார்.

முன்­னெச்­செ­ரிக்கைத் திட்­டங்­கள் முதல், ஆபத்­தில் உள்ள மாண­வர்­களை அடை­யா­ளம் கண்டு தலை­யிட்டு உதவி செய்­யும் திட்­டங்­கள் வரை சிங்­கப்­பூர்ப் பள்­ளி­களில் பல­வகை உத­வித் திட்­டங்­கள் நடப்­பில் உள்­ள­தாக திரு சான் தெரி­வித்­தார்.

மாண­வர்­க­ளுக்கு சக­மா­ண­வர்­களே ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் உரு­வாக்­கப்­பட்டு வரும் கட்­ட­மைப்­பு­கள் அவற்­றில் ஒன்று.

"மன­உ­ளைச்­ச­லில் உள்ள நண்­பர்­க­ளு­டன் அமர்ந்து, அன்­பும் பரி­வும் காட்­டு­வ­தோடு பெற்­றோர், ஆசி­ரி­யர்­கள், ஆலோ­ச­கர்­கள் போன்ற நம்­ப­க­மான பெரி­ய­வர்­களி­டம் உத­வி­கேட்கும்படி அவர்­களை ஊக்கு­விக்க மாண­வர்­கள் அனை­வரும் கற்­றுக்­கொள்­வர் என்­பது எங்­களது நம்­பிக்கை," என்று திரு சான் குறிப்­பிட்­டார்.

ஆசி­ரி­யர்­கள் அனை­வர்க்­கும் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான அடிப்­ப­டைத் திறன்­கள் உள்­ள­தாகத் தெரி­வித்த கல்வி அமைச்­சர், ஆசி­ரி­யர்­கள் தங்­கள் மாண­வர்­களைக் கண்காணித்து, ஏதே­னும் சரி­யாக இல்லையென்று நினைத்­தால் அவர்களை அணுகி, செவி­மடுக்க வேண்­டும் என்று சொன்னார்.

அத்­து­டன், சிறப்­புப் பயிற்சி பெற்ற ஆசி­ரி­யர்-ஆலோ­ச­கர்­க­ளை­யும் ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் பணி­யாற்­றும் பள்ளி ஆலோ­ச­கர்­க­ளை­யும் மாண­வர்­கள் அணு­க­லாம் என்­றார் திரு சான்.

மாண­வர்­களை 'ரீச்' எனும் சமூக மன­நல உத­விக்­கு­ழுக்­கள் அல்­லது மற்ற சமூக சேவை அமைப்பு­களில் உள்ள நிபு­ணர்­களி­டம் உதவி பெறவும் பள்ளி ஆலோ­சகர்­க­ள் அனுப்பலாம்.

அத்­து­டன், உயர்­நிலை 1, 2 மாண­வர்­க­ளுக்கு இவ்­வாண்டு பண்­பு­ந­லன், குடி­மைக் கல்வி தொடங்­கப்­பட்­டுள்ளதையும் அமைச்­சர் சுட்­டி­னார்.

அதில், மன­நலம் தொடர்பில் மாண­வர்­க­ளின் புரி­தலை அதி­கப்­படுத்த கூடு­தல் அம்­சங்­கள் சேர்க்­கப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.