தேசிய தேர்வுகளுக்கான பாடங்கள் குறைப்பு

தேசிய தேர்வுகளுக்கான பாடங்கள் குறைப்பு

2 mins read
1ddbc9fb-0712-4cd1-ba5e-cfa387fbacbb
-

இவ்­வாண்டு 'ஓ', 'என்', 'ஏ' நிலைத் தேர்­வு­களை எழு­தும் மாண­வர்­களுக்­குப் பாடத்­திட்­டத்­தின் இறுதி­யில் இடம்­பெற்­றுள்ள சில பாடங்­களில் (சிஎல்டி) இருந்து கேள்­வி­கள் கேட்­கப்­ப­டாது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

சற்று அழுத்­தத்­தைக் குறைக்­கும் வகை­யில், மற்ற வகுப்பு மாண­வர்­க­ளுக்­கும் ஆண்­டி­று­தித் தேர்வு­களுக்­கான பாடங்கள் குறைக்­கப்­ப­ட­லாம்.

உரு­மா­றிய 'டெல்டா' கொரோனா கிருமி எதிர்­பார்த்­த­தற்­கும் மேலாக பள்ளி நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­விட்­ட­மை­யால், தேர்­வெ­ழு­தும் மாண­வர்­கள்­மீது தமது அமைச்சு குறிப்­பாக அக்­கறை செலுத்தி வரு­வ­தாக திரு சான் கூறி­னார்.

விரை­வா­க­வும் அதி­க­மா­னோ­ரை­யும் தொற்­ற­வல்ல 'டெல்டா' கிரு­மி­யால் அண்­மைய மாதங்­க­ளாக கொரோனா பர­வல் கூடி­யுள்­ளது.

"'சிஎல்டி' எனும் அந்­தப் பாடங்­கள் ஏற்­கெ­னவே பள்­ளி­களில் பயிற்று­விக்­கப்­பட்டு இருந்­தா­லும், தேசிய அள­வி­லான தேர்­வு­களில் இருந்து அவற்றை நீக்­கு­வது, மாண­வர்­கள் தேர்வு அழுத்­தத்­தில் இருந்து விடு­பட உத­வும்," என்று அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு 'பிஎஸ்­எல்இ' தேர்­வி­லி­ருந்து 'சிஎல்டி' நீக்­கப்­ப­டு­வதா­கக் கல்வி அமைச்சு கடந்த மாதம் அறி­வித்­தது. கொரோனா பர­வல் கார­ண­மா­கச் சென்ற ஆண்­டும் தேசிய அள­வி­லான தேர்­வு­களில் இருந்து அந்­தப் பாடங்­கள் நீக்­கப்­பட்­டன.

இத­னி­டையே, மாண­வர்­களில் பல­ரும் தங்­க­ளது கொவிட்-19 தடுப்­பூ­சி­களை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்­டி­ருப்­பர் என்­ப­தால் அடுத்த சில வாரங்­களில் உயர்­நி­லைப் பள்ளி, பல்­க­லைக்­க­ழக புகு­முக வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் தொடங்­க­வுள்­ளன.

"தேசிய பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­பட்டு, இணைப்­பாட நட­வ­டிக்­கை­க­ளைப் பாது­காப்­பாக நடத்­து­வ­தற்­காக எங்­க­ளது திட்­டங்­களை ஒருங்­கிணைத்து வரு­கி­றோம்," என்று திரு சான் கூறி­னார்.

அத்­து­டன், பள்­ளி­களில் இப்­போது 700க்கு மேல் உள்ள ஆசி­ரி­யர்-ஆலோ­ச­கர்­க­ளின் எண்­ணிக்­கையை அடுத்த சில ஆண்­டு­களில் 1,000க்கு மேல் உயர்த்த கல்வி அமைச்சு இலக்கு கொண்­டுள்­ளது.

இப்­போது எல்­லாப் பள்­ளி­களும் குறைந்­தது ஆலோ­ச­கர் ஒரு­வ­ரைக் கொண்­டுள்ள நிலை­யில், அப்­ப­ணி­யில் மேலும் பல­ரைச் சேர்க்க அல்­லது தகு­தி­யான கல்­வி­யா­ளர்­களை ஆலோ­ச­கர்­க­ளா­கச் செயல்­படும் வகை­யில் பொறுப்பை மாற்ற கல்வி அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ள­தாக திரு சான் தெரி­வித்­தார்.

உதவி தேவைப்­படும் மாண­வர்­களை அடை­யா­ளம் கண்டு, ஆத­ரவு அளிக்­கும் வித­மாக ஆசி­ரி­யர்­கள் அனை­வர்க்­கும் மன­ந­லக் கல்வி தொடர்­பில் கூடு­தல் பயிற்சி வழங்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

ஒவ்­வொரு தவ­ணைக் காலத்­தின் தொடக்­கத்­தி­லும் மாண­வர்­கள் நல­மு­டன் இருப்­ப­தைச் சோதிக்க பிரத்­தி­யேக நேரம் ஒதுக்­கப்­படவுள்­ளது.