விமானத் தொழில்துறை அம்சங்களில் சிங்கப்பூர் கவனம்

விமானத் தொழில்துறை அம்சங்களில் சிங்கப்பூர் கவனம்

2 mins read
74046a89-1d08-46ad-a62c-eab033ba63d4
-

அடுத்த ஐந்து முதல் 10 ஆண்­டு­களில் வளர்ச்சி காண­வுள்ள விமா­னத் தொழில்­துறை அம்­சங்­க­ளைக் கைப்­பற்ற சிங்­கப்­பூர் முயற்சி செய்­வ­தாக மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். இத்­து­றை­யில் வளர்ச்சி காணக்­கூ­டிய அம்­சங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. அவற்­றைக் கைப்­பற்ற அர­சாங்­கம் முயற்சி செய்­கிறது என்­றார் அவர்.

இந்த வளர்ச்­சிப் பிரி­வு­கள் குறித்த விவ­ரங்­களை இப்­போது தெரி­விக்க முடி­யாது என்­றார் அவர். எனி­னும் அவை அடுத்த ஐந்து முதல் 10 ஆண்­டு­களில் வலு­வாக மீட்­சி­ய­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும், அவை பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் மற்­றும் பல்­வேறு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான பணிக்­கு­ழு­வி­னால் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார். கூடு­தல் விவ­ரங்­கள் வரும் வாரங்­களில் அறி­விக்­கப்­படும் என்­றார் அவர்.

எல்­லைத் தடை­களை நீக்­கு­வ­தில் தாம­தம், கொவிட்-19 உரு­மாற்­றக் கிரு­மி­க­ளின் பர­வல் போன்­ற­வற்­றால் விமா­னத் துறை­யின் மீட்சி தொடர்ந்து சிர­ம­மா­ன­தாக உள்ள சூழ­லில் டாக்­டர் டான் இத­னைத் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே விமா­னத் துறை, சுற்­று­லாத் துறை­களில் மனி­த­வ­ளத் தேவை நிரந்­த­ர­மா­கக் குறைக்­கப்­ப­டுமா என்ற தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு டெஸ்­மண்ட் சூ எழுப்­பிய கேள்­விக்கு நேர­டி­யாக பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை.

"இந்த நெருக்­க­டி­நி­லை­யில், கொள்­ளை­நோ­யி­லி­ருந்து மீண்டு வரு­வதை உறு­தி­செய்­யும் முயற்­சி­யில் இருக்­கி­றோம். ஒரு குறிப்­பிட்ட (வளர்ச்சி) பிரி­வில், நம் திறன் தொகுப்பு கவ­னத்­தைச் செலுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டும்," என்று டாக்­டர் டான் கூறி­னார்.

போக்­கு­வ­ரத்து மையம் என்ற தகுதி, நம்­ப­கத்­தன்மை, ஊழி­ய­ர­ணி­யின் வலிமை ஆகி­ய­வற்­றைக் கருத்­தில்­கொள்­ளும்­போது சிங்­கப்­பூர் தொடர்ந்து காலூன்­றக்­கூ­டிய துறை­களில் இது ஒன்று என அமைச்­சர் டான் சுட்­டி­னார்.

இடைக்­கா­லத்­தில், விருந்­தோம்­பல் துறை உட்­பட கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள துறை­களில் உள்ள பல­ரும் புதிய வேலை­க­ளைக் கண்­டு­பி­டித்து புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும். விமா­னப் போக்­கு­வ­ரத்து, விண்­வெளி, விருந்­தோம்­பல் தொடர்­பான படிப்­பு­களில் அண்­மை­யில் பட்­டம் பெற்ற மாண­வர்­களும் நிச்­ச­ய­மற்ற எதிர்­கா­லத்தை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­க­லாம்.

உள்­ளூர்­வா­சி­க­ளின் வேலை வாய்ப்­பு­களை மேலும் விரி­வாக்­கக்­கூ­டிய நிறு­வ­னங்­கள், செப்­டம்­பர் மாதத்­தில் காலா­வ­தி­யா­க­வுள்ள வேலை உரு­வாக்­கத்­திற்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டத்­தைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் என நம்­பு­வ­தாக டாக்­டர் டான் கூறி­னார். இத்­திட்­டத்­தின் கீழ், புதி­தாக வேலை­யில் அமர்த்­தப்­படும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­குத் தலா $54,000 வரை கிடைக்­கும்.

"இது சக குடி­மக்­க­ளை­யும் நிறு­வ­னங்­க­ளை­யும் நல்ல நிலை­யில் வைத்­தி­ருக்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் அமைச்­சர். சுகா­தா­ரப் பாது­காப்பு, நிதி, தக­வல்­தொ­டர்பு போன்ற வளர்ச்­சித் துறை­க­ளின் வேலை­வாய்ப்­பு­க­ளுக்கு பட்­ட­தா­ரி­கள் பொருத்­த­மாக இருப்­பதை உறுதி செய்­வ­தற்­காக உயர்­கல்வி நிறு­வ­னங்­களும் தங்­கள் படிப்­பு­களை விரி­வு­ப­டுத்­து­கின்­றன." என்று அவர் மேலும் குறிப்­பிட்­டார்.