தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-இலங்கை அரசதந்திர உறவின் 50ஆம் ஆண்டு நிறைவு: அஞ்சல்தலைகள் வெளியீடு

1 mins read
064f5da8-01d0-41b0-913d-158237f1ce13
சிங்கப்பூரின் ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் திருமதி சஷிகலா பிரமவர்தனே (இடம்), இலங்கைக்கான சிங்கப்பூர் தூதர் திரு எஸ். சந்திரதாஸ். படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு -

சிங்­கப்­பூ­ருக்­கும் இலங்­கைக்­கும் இடை­யி­லான அர­ச­தந்­திர உற­வின் 50ஆம் ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வகை­யில் இரண்டு சிறப்பு அஞ்­சல்­த­லை­கள் நேற்று வெளி­யிடப்­பட்­டன. இவ்­விரு நாடு­களும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான அர­ச­தந்­திர உறவை 1970ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஏற்­ப­டுத்­திக்­கொண்­டன. 50 ஆண்டு நிறைவு வர­லாற்று நிகழ்­வில் இலங்­கை­யின் வெளி­யுறவு அமைச்­சர் திரு தினேஷ் குண­வர்­த­னா­வும் சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கிருஷ்­ண­னும் மெய்­நி­கர் வழி கலந்து­கொண்­ட­னர்.

அந்த நிகழ்­வில் இரு அஞ்­சல்­தலை­கள் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. 'கடல்­துறை பாது­காப்பு' எனும் கருப்­பொ­ரு­ளில் உரு­வாக்­கப்­பட்ட இந்த அஞ்­சல்­தலை­கள் இலங்­கை­யில் உள்ள பவள சுற்­றுச்­சூ­ழல் அமைப்­பை­யும் சிங்­கப்­பூ­ரின் சதுப்­பு­நி­லங்­க­ளை­யும் பிர­தி­ப­லிப்­ப­தாக உள்­ளன.

இந்த மெய்­நி­கர் நிகழ்வு நடை­பெ­று­வ­தற்கு சில மணி நேரங்­களுக்கு முன், சிங்­கப்­பூர் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திரு­மதி சஷி­கலா பிர­ம­வர்­த­னே­வும் இலங்­கைக்­கான சிங்­கப்­பூர் தூதர் திரு எஸ். சந்­தி­ர­தா­ஸும் சிறப்பு அஞ்­சல்­தலை­களை வெளி­யிட்­ட­னர்.

இந்த வர­லாற்று நிகழ்­வின் தொடர்­பில் இரண்டு அஞ்­சல்­த­லை­களை வெளி­யிட்ட சிங்­கப்­பூர் அர­சாங்­கம், சிங்­கப்­பூர் வெளி­யு­றவு அமைச்சு, தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம், சிங்­போஸ்ட், இலங்கை அஞ்­சல் துறை, சிங்­கப்­பூ­ரில் உள்ள இலங்­கைத் தூத­ர­கம் ஆகி­ய­வற்­றுக்கு தனது நன்­றி­யை­யும் வாழ்த்­து­க­ளை­யும் இலங்கை வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துக் கொண்­டது.