பொதுத் துறையில் தரவுக் கசிவு அதிகரிப்பு

பொதுத் துறையில் தரவுக் கசிவு அதிகரிப்பு

2 mins read
3d7bbc87-f799-4887-a7dc-ee403a33c7a8
-

பொதுத் துறை­யில் கடந்த ஆண்டு 108 தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­

பட்­டுள்­ளது.

2019ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது இது 44 விழுக்­காடு அதி­கம். 2019ஆம் ஆண்­டில் பொதுத் துறை­யில் 75 தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன.

தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் அனைத்­தும் தீவி­ர­மா­ன­தல்ல என்று அர­சாங்­கத்­தின் தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சில தர­வுக் கசிவு சம்­ப­வங்­

க­ளால் இலே­சான அசௌ­க­ரி­யத்­தை­யும் விரும்­பத்­த­காத விளை­வு­க­ளை­யும் சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப்பு எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­த­தாக அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் கூறி­யது.

கடந்த ஆண்டு நிகழ்ந்த தர­வுக் கசி­வு­க­ளால் தேசிய பாது­காப்­பைப் பாதிக்­கும் சம்­ப­வங்­கள், பொது­மக்­க­ளின் நம்­பிக்­கை­யைச் சீர்­கு­லைக்­கும் சம்­ப­வங்­கள், மர­ணம் அல்­லது படு­கா­யம் விளை­விக்­கும் சம்­ப­வம், மிக மோச­மான நிதி இழப்பு போன்­றவை நிக­ழ­வில்லை.

இது­வரை இரண்டு தர­வுக் கசிவு சம்­ப­வங்­க­ளால் மட்­டுமே மோச­மான விளை­வு­கள் ஏற்­பட்­டுள்­ளன. இரண்டு சம்­ப­வங்­களும் 2018ஆம் ஆண்­டில் நிகழ்ந்­தன.

அவற்­றில் முதல் சம்­ப­வம், சுகா­தார அமைச்­சின் எச்­ஐவி பதி­வ­கத்­தி­லி­ருந்து கசிந்த தர­வு­க­ளா­கும்.

அதன் விளை­வாக 14,200 நோயா­ளி­க­ளின் தனி­ந­பர், ரக­சிய விவ­ரங்­கள் வெளி­யா­கின.

இரண்­டா­வது சம்­ப­வம், அரசு நீதி­மன்­றத்­தின் இணை­யக் கட்­ட­மைப்­பி­லி­ருந்து கசிந்த 223 வழக்கு­ கள் பற்­றிய விவ­ரங்­கள்.

பொதுத் துறை­யில் அதி­க­ரித்­துள்ள தர­வுக் கசிவு சம்­ப­வங்­

க­ளைப் போலவே தனி­யார் துறை­யி­லும் அத்­த­கைய சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டுள்­ளன.

உத்­தேச தனி­ந­பர் தர­வுக் கசிவு ­கள் குறித்து கடந்த ஆண்­டில் 6,100 புகார்­கள் செய்­யப்­பட்­டன.

2019ஆம் ஆண்­டில் தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு ஆணை­யத்­தி­டம் 4,500 புகார்­கள் செய்­யப்­பட்­டன.

"கொவிட்-19 ஊழல் கார­ண­மாக மின்­னி­லக்­கப் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு இது­வும் கார­ண­மாக இருக்­க­லாம்.

"வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அணு­கு­மு­றை­யா­லும் வீட்­டில் பாது­காப்­பற்ற இணை­யக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­து­வ­தா­லும் தர­வுக் கசிவு சம்­ப­வங்­கள் ஏற்­படும் அபா­யம் அதி­க­ரிக்­கக்­கூ­டும்.

"தனி­யார், பொதுத் துறை­கள் எதிர்­நோக்­கும் ஆபத்தை இந்த நிலை வெளிச்­சத்­துக்­குக் கொண்டு வந்­துள்­ளது. தனி­ந­பர் தர­வு­க­ளைப் பாது­காக்க உட­ன­டி­யாக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்," என்று அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.