சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கியதற்கு முன்பே பெரியம்மை, காச நோய் போன்ற தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய அனுபவம் செங்காங் பொது மருத்துவமனைக்கு உள்ளது.
டிரேஸ்டுகெதர் தொழில்நுட்பத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதற்கு முன்பே அதிர்வலை அடையாள தொழில்நுட்பத்தையும் ஒய்ஃபையையும் செங்காங் பொது மருத்துவமனை பயன்படுத்தியது.
இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காண எடுத்துக்கொள்ளப்பட்ட நேரத்தை மருத்துவமனை வெகுவாகக் குறைத்தது.
பொதுவாக செய்து முடிக்க பல மணி நேரம் எடுக்கும் பணியை இந்த அதிர்வலைத் தொழில்
நுட்பத்தால் மருத்துவமனை 10லிருந்து 20 நிமிடங்களில் செய்து முடித்தது.
2018ஆம் ஆண்டில் திறக்கப்பட்டதற்கு முன்பே இந்த அணுகுமுறைக்கான திட்டம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
"சார்ஸ் நோய்க்குப் பிறகு வேறொரு தொற்றுநோயால் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது என்று எங்களுக்குத் தெரியும்," என்று செங்காங் பொது மருத்துவமனையின் உத்திபூர்வத் திட்டப் பிரிவுக்கான இயக்குநர் திருவாட்டி லீ புவே சுவான் தெரிவித்தார்.
2003ஆம் ஆண்டில் வெறும் நான்கு மாதங்களில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் 33 பேர் உயிரிழந்தனர்.

