ஜோகூர்பாரு: சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜோகூர்பாருவின் மாநில முதலீடு, கூட்டுறவு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மனிதவளக் குழுவின் தலைவர் முகமது இஸார் அகமது கூறுகையில், "தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்காக இந்த முடிவு மறுஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஹஸ்னி முகம்மதுவிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்," என நம்பிக்கை தெரிவித்தார்.
'சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்களுக்கு வீட்டுத் தனிமை'
1 mins read
-

