ரவி மேனன்: தகுதி அடிப்படையை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும்

ரவி மேனன்: தகுதி அடிப்படையை மேம்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கை அளிக்கவும்

2 mins read
0242b191-588f-41ef-83cb-6419a8adb871
-

சிங்­கப்­பூ­ரின் தகுதி அடிப்­ப­டை­யிலான அணு­கு­முறை இது­வரை நன்­மு­றை­யில் செயல்­பட்டு வந்­துள்­ளது. இருப்­பி­னும் அது மேன்­மே­லும் குறு­கிய வட்­டத்­துக்­குள் ஒடுங்கி, கடு­மை­யா­கும் சாத்­தி­யம் உள்­ளது.

எனவே, தகுதி அடிப்­படை மேம்­படுத்­தப்­பட்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யும் வாய்ப்­பும் ஏற்­ப­டுத்­தித் தரப்­பட வேண்­டும் என்­றார் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன்.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வின்­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

ஜன­நா­ய­கம், தகுதி அடிப்­படை, சந்தை நில­வ­ரம் ஆகி­ய­வற்­றைக் காட்­டி­லும் வேறு சிறந்த மாற்று வழி இல்­லை­யென்­றா­லும், அவற்றை அப்­ப­டியே விட்­டு­விட்­டால் சமூக அள­வில் அவை பாதிப்பை ஏற்­படுத்­தத் தொடங்­க­லாம் என்­றார் அவர்.

தகுதி அடிப்­ப­டையை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பில் மூன்று வழி­களை அவர் எடுத்­து­ரைத்­தார்.

அதை விரி­வு­ப­டுத்தி மேலும் பன்­மு­கத்­தன்மை கொண்ட மனி­தத் திறன்­களை அடை­யா­ளம் காண்­பது, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் வகை­யில் ஒரு சில மாற்­றங்­க­ளைச் செய்­வது, சமு­தா­ய­மும் செல்­வ­வ­ள­மும் ஒரு நப­ரின் வெற்­றிக்­குப் பங்­காற்­று­வ­தைப் புரிந்­து­கொண்டு பரிவு காட்­டு­வது ஆகி­ய­வையே அந்­த­மூன்று வழி­மு­றை­க­ளா­கும்.

பாடம் அடிப்­ப­டை­யில் தரம் பிரிக்­கும் முறையை நோக்­கிப் பள்­ளி­கள் சென்­று­விட்­டா­லும் பள்­ளி­க­ளைத் தாண்டி வேலை­யி­டங்­க­ளி­லும் தகுதி அடிப்­ப­டை­யி­லான அணு­கு­முறை வேண்­டும் என்­றார் திரு ரவி மேனன். பல நிறு­வ­னங்­களில் இன்­ன­மும் கல்­வித் தகுதி, பேட்டி­யின்­போது அளிக்­கும் பதில்­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் முக்­கி­யத்­து­வம் தரப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

நிறு­வ­னத்­திற்­குத் தேவைப்­படும் அம்­சங்­க­ளாக அவை இருப்­ப­தில்லை என்­றார் அவர்.

சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் நம் பங்கு

சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க சிங்­கப்­பூ­ரர்­கள் ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­லாம் என்று தம் உரை­யின்­போது திரு ரவி மேனன் குறிப்­பிட்­டார்.

இயற்கை விரும்­பி­க­ளாக, சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் நபர்­களாக சிங்­கப்­பூ­ரர்­கள் மாற, தற்­போ­தைய பரு­வ­நிலை மாற்­றமே முக்­கிய கார­ண­மா­கி­விட்­டது.

அர­சாங்­கம் திட்­டத்தை ஏற்­பாடு செய்­யும் என்று காத்­தி­ருக்­கா­மல் மக்­கள் தாங்­க­ளா­கவே முன்­வந்து சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்­கும் வழி­க­ளைத் தேட­வேண்­டும். அதில் ஒன்று, இறைச்சி உண்­ப­தைக் குறைப்­ப­தா­கும் என்­றார் திரு ரவி மேனன்.

எரி­சக்­தியை அதி­கம் பயன்­படுத்­தாத வழி­களை அனை­வ­ரும் தங்­கள் இல்­லப் பயன்­பாடு மூலம் கண்­ட­றிய வேண்­டும் என்­றார். நெகி­ழி­க­ளைத் தவிர்ப்­பது, குப்­பை­களைக் குறைப்­பது, பொதுப் போக்கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­வது போன்­ற­வற்­றை­யும் அவர் உதா­ர­ணம் காட்­டி­னார்.