'முழுத் தகவலும் தவறு'

'முழுத் தகவலும் தவறு'

3 mins read
a18b7ec1-4fd6-47c6-88a8-8b2bac18b9b1
-

கேடிவி நிலை­யங்­க­ளு­டன் தொடர்­பு­டைய கிரு­மித்­தொற்று குழு­மத்தை சிங்­கப்­பூர் கையாண்­ட­வி­தம் குறித்து நிக்கே ஏஷி­யா­வில் வெளி­யான கட்­டு­ரை­யின் முழுத் தக­வல்­களும் தவ­றாக இருப்­ப­தாக சிங்­கப்­பூர் உள்­துறை அமைச்­சின் மூத்த இயக்­கு­நர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

ஊட­கங்­க­ளுக்கு அனுப்­பிய மறுப்பு அறிக்­கை­யில் கூட்டு நட­வ­டிக்கை குழு­வைச் சேர்ந்த திரு சேம் டீ, 'சிங்­கப்­பூ­ரின் அண்­மைய கிரு­மிப் பர­வல் பின்­ன­ணி­யில் தோல்­வி­கள்' எனும் தலைப்­பில் வெளி­யி­டப்­பட்ட கட்­டு­ரை­யில் கேடிவி நிலை­யங்­களில் கள்­ளப் பணத்தை மாற்­று­வது மற்­றும் சட்­ட­வி­ரோத பாலியல் செயல்களில் குற்­றக்கும்­பல்­கள் ஈடுபடுவதாகவும் கூறு­வது தவறு என்­றார்.

திரு ஆண்டி வோங் எழு­திய அந்­தக் கட்­டு­ரை­யில் குறிப்­பிட்­ட­து ­போல எந்­த­வித விளக்­க­மும் இல்­லா­மல் கேடிவி நிலை­யங்­கள் செயல்­பட அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­வ­தும் தவறு என்று அவர் குறிப்­பிட்­டார்.

இம்­மா­தம் 23ஆம் தேதி அந்த நிதி நாளேட்­டின் இணை­யப்­பக்­கத்­தில் இந்­தக் கட்­டுரை வெளி­யா­னது.

"கேடிவி குழு­மம் உடனே கட்டுப்­ ப­டுத்­தப்­பட்­டது. ஜூலை 22 முதல் 26 வரை­யில் ஒவ்­வொரு நாளும் அத­னு­டன் தொடர்­பு­டைய ஐந்து தொற்­றுச் சம்­ப­வங்­களே பதி­வா­கின. அது, மேலும் குறைந்து வரு­கிறது. இம்­மா­தம் 22ஆம் தேதி அர­சாங்­கம் மீண்­டும் கடு­மை­யான பாது­காப்பு நடை­மு­றை­களை அமல்­ப­டுத்­தி­ய­தற்கு அந்­தக் குழு­மம் கார­ண­மல்ல. உணவுச் சந்­தை­களில் புதி­தாக ஏற்­பட்ட புதிய கிரு­மிப் பர­வலே அதற்குக் கார­ணம்," என்று திரு டீ சொன்­னார்.

"சட்­ட ­வி­ரோத பாலி­யல் நட­வ­டிக்­கை­களுக்கு எதி­ரான உங்­கள் ெசய்­தி­யா­ள­ரின் உய­ரிய நிலைப்­பாட்டை பாராட்­டு­கி­றோம். ஆனால் பொதுக் கொள்­கை­கள் மீதான அவ­ரது கருத்­து­கள் உண்­மை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்க வேண்­டும், கற்­பனை எண்­ணங்­களாகக் இருக்­கக் கூடாது," என்­றார். 200க்கும் மேற்­பட்ட தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் கேடிவி குழு மத்துக்கு தொடர்புள்ளது என்று தனது கட்­டு­ரை­யில் வோங் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத்­த­கைய கேடிவி நிலை­யங்­களை உணவு நிலை­யங்­க­ளாக மாற்ற அனு­ம­தித்­தி­ருக்க வேண்­டுமா என்­றும் அவர் கேள்வி எழுப்பி யிருந்தார். கேடு­வி­ளை­விக்­கும் பாலி­யல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் கும்­பல்­கள் சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டு­கின்­றன. ஆனால் கடு­மை­யான சட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளைக் கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர் அவற்­றைத் தடுக்கத் தவ­றி­விட்­டது. எல்­லைக் கட்­டுப்­பாடு கொள்­கைக­ளி­லும் ஓட்டை இருப்­ப­தா­க­வும் வோங் கட்­டு­ரை­யில் கூறி­யி­ருந்­தார். குடும்­பத் தொடர்பு இருப்­ப­தாக பொய்­யா­கக் கூறி வெளி­நாட்டு பாலி­யல் தொழி­லா­ளர்­கள் நாட்­டுக்­குள் நுழை­வ­தாகவும் அவர் தெரிவித் திருந்தார். இதற்­கு விளக்கம் அளித்த திரு டீ, குற்றச்செயல் கும்பல்களை ஒடுக்கவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்று வது, ஆள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

குற்றக் கும்பல் நடவடிக்கைகள் மிகக்குறைவாக உள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. 2020 உலக ளாவிய சட்டம், ஒழுங்கு அறிக்ைக யில் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாக சட்ட, ஒழுங்கில் சிங்கப்பூர் முதல் இடத்தில் இருப்ப தை திரு டீ சுட்டிக்காட்டினார்.

கேடிவி நிலையங்களுக்குச் செல்லும் பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சி செய்வதை அரசாங்கம் அறிந்துள்ளது. இத்தகைய இடங் களில் மக்கள் சந்திப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் அந்த இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடு படுவது உரிமம் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறுவதாகும். இத்தகைய மீறல்கள் வழக்கமான அமலாக்க நடவடிக் கைகள் மூலம் ஒடுக்கப்படுகின்றன.

2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை (2020) போலிசார் 3,000 இரவு கேளிக்கை விடுதிகளை சோதனையிட்டு ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு வருகை யாளர்களை வரவேற்கிறோம். அதே சமயத்தில் சிலர் பாலியல் தொழி லுக்காக நுழைகின்றனர். ஆனால் நாட்டுக்குள் நுழையும் நிபந்தனை களில் இதற்கு அனுமதியில்லை.கேடிவி நிலையங்கள் உணவு, பானம் விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது என்றார் திரு சேம் டீ.