சுகாதார அறிவியல் ஆணையம், இணையம் வாயிலாக விற்கப்படும் சட்டவிரோதப் பொருட்களை தடுத்து நிறுத்தும் முயற்சி யாக புதிய கண்காணிப்பு முறையை மும்முரமாக சோதித்து வருகிறது.
ஹோம் டீம் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி முகவை, இந்தக் கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளது.
இதில் தானியக்க செயல்முறை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது, இணையத்தில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலை ஊடுருவி சட்டவிரோதப் பொருட்களை அடையாளம் காணும் என்று ஆணையம் தெரிவித்தது.
சட்டவிரோத மருந்துகள், சுகாதாரப் பொருட்கள் தவிர ஒப்பனைப் பொருட்களும் கண்காணிக்கப்படுகின்றன.
இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் வரை சோதனை கட்டத்தில் உள்ளூர் மின்வர்த்தகத் தளங்களிலிருந்து 3,200க்கும் மேற்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் அகற்றப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
அமலாக்க அதிகாரிகள் சட்டவிரோதப் பொருட்களை ஆராய்ந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
புதிய கண்காணிப்பு முறை நல்ல பலன் அளித்துள்ளது.
சில வாரங்கள் தேவைப்படும் வேலையை சில மணி நேரங்களில் முடித்துவிடுவதாக சுகாதார அறிவியல் ஆணையம் குறிப் பிட்டது.

