தொண்டு நிறுவனத்தில் $1.4 மி. மோசடி செய்த பெண் ஊழியர்

தொண்டு நிறுவனத்தில் $1.4 மி. மோசடி செய்த பெண் ஊழியர்

2 mins read
cc221a5a-5d49-4648-9bd8-47adb08ec2d3
-

தொண்டு நிறு­வ­னத்­தில் பணி­யாற்றிய 36 வயது பெண் ஊழி­யர், தமது பத­வி­யைப் பயன்­ப­டுத்தி அந்­நி­று­வ­னத்­தின் 1.4 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் மேலான தொகையை மோசடி செய்­துள்­ளார்.

இது தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்று நடை­பெற்­றது. இதில் டான் ஷு ஹான் எனும் அந்த முன்­னாள் ஊழி­ய­ருக்கு ஆறு ஆண்டு­, ஏழு மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவர் மீது நம்­பிக்கை மோசடி, சட்டம் தன் கடமையை செய்­ய­ விடா­மல் தடுத்­தது, பொது அதி­கா­ரி­யி­டம் பொய் சொன்­னது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

டான், 2019ல் காச­நோய்க்கு எதி­ரான அனைத்­து­லக ஒன்­றி­யம், நுரை­யீ­ரல் நோய் ஆசிய பசி­பிக் எனும் பதிவு செய்­யப்­பட்ட அறப்­பணி அமைப்­பில் நிதி மற்­றும் நிர்­வாக உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்­தார்.

அறப்­பணி அமைப்­பின் சார்­பில் பணம் கொடுக்க வேண்­டி­ய­வர்­களுக்கு வங்­கிக்­க­ணக்கு மூலம் பணம் அனுப்­பு­வது அவ­ரது வேலை­களில் ஒன்று.

இதற்­காக சக ஊழி­ய­ரான குத்ெபர்ட் சிங்க் என்பவரி­ட­மி­ருந்து தொண்டு நிறு­வ­னத்­தின் ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கிக் கணக்­கின் 'ஐபேங்­கிங் டோக்­கன்' சாத­னத்­தைப் பெற்­றி­ருந்­தார்.

ஆனால் வேலை முடிந்தும் அதனை அவர் திருப்­பித் தர­வில்லை. அது பற்றி கேட்­ட­போ­தெல்­லாம் தான் மறந்து வீட்­டில் வைத்­து­விட்­ட­தாக டான் மழுப்பி னார்.

2019 ஏப்­ரல் 4ஆம் தேதிக்­கும் ஜூன் 10ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அவர், ஸ்டாண்­டர்ட் சார்ட்டர்ட் வங்­கிக் கணக்­கி­லி­ருந்து 133 பரிவர்தனைகள் மூலம் பல கட்டங்களாக பல்வேறு தொகையை வேறு சில வங்­கிக் கணக்குகளுக்கு மாற்­றி­யுள்­ளார். அதன் மதிப்பு சுமார் ஒரு மில்­லி­யன் வெள்­ளி­யா­கும். ஆனால் அவரே மோசடி ஒன்றில் சிக்கி அவற்றில் 797,000 வெள்­ளியை இழந்துள்ளார். எஞ்­சிய பணத்தை தமது சொந்த செல­வுக்­கும் ஆடம்­பரப் பொருட்­கள் வாங்­க­வும் கடனை அடைக்­க­வும் அவர் பயன்­ப­டுத்­தி­னார். தொண்டு நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான மற்­றொரு வங்­கிக் கணக்­கி­லி­ருந்­தும் அவர் 322,000 யுஎஸ் டாலரை எடுத்­துள்­ளார்.

இந்­தப் பணத்­தை­யும் அவர் சொந்த செல­வுக்­கும் மோச­டிக் காரியங்களுக்கும் பயன்­ப­டுத்­தி­னார்.

'ஐபேங்­கிங் டோக்­கன்' சாத­னத்­தைத் திருப்­பித் தரு­மாறு பல­முறை கேட்­டும் தரா­த­தால் கவ­லை­ய­டைந்த திரு சிங்க், ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்­கிக் கணக்­கு­களை சரி பார்த்­தார். அப்­போ­து­தான் டானின் தில்லு ­முல்லு தெரிய வந்­தது. 2019 ஜூன் 20ஆம் தேதி டானை தடுப்­புக் காவ­லில் வைத்து விசா­ரித்­த­தில் பல உண்­மை­கள் வெளி­வந்­தன. போலி­சார் அவ­ரி­ட­மி­ருந்து 225,000 வெள்ளி மதிப்­பி­லான ரொக்­கத்தை யும் ஆடம்­ப­ரப் பொருட்­களையும் மீட்டுள்ளனர்.