கொவிட்-19 கிருமித்தொற்றால் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் உள்ள இடங்களிலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் துப்புரவுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய சுற்றுப்புற வாரியம் புதிய துப்புரவுப் பணி செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தாதிமை இல்லங்கள், பள்ளிகள், காப்பிக்
கடைகள் போன்ற இடங்கள் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதல் ஆறு மாதங்கள் அறி
முகக் காலகட்டமாக எடுத்துக்கொள்ளப்படும்.
புதிய துப்புரவுப் பணி விதி
முறையை நன்கு புரிந்துகொண்டு அதன்படி செயல்பட பட்டியலிடப்பட்டுள்ள இடங்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
வெவ்வேறு துறைக்கு இந்த அறிமுகத் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
உதாரணத்துக்கு ஏறத்தாழ 180 மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள் புதிய துப்புரவுப் பணி செயல்
முறையை இன்று முதல் கடைப்
பிடிக்கின்றன.
கிட்டத்தட்ட 1,100 காப்பிக்கடைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து புதிய விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட இருக்கின்றன.
திட்டத்துக்கு உட்படும் இடங்கள் தங்கள் ஊழியர்களைக் கட்டாய இரண்டு நாள் சுற்றுப்புறக் கட்டுப்பாடு ஒருங்கிணைப்பாளர் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.
இதுவரை அப்பயிற்சியை 350 பேர் முடித்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்தோர் பராமரிப்பு, இளையர், சமூகச் சேவை நிலையங்களில் பணிபுரிபவர்கள்.

