டோவர் வனப்பகுதிக்கான திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தின் கிழக்குப் பகுதியில் அடுத்த ஆண்டு
வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பேட்டை தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குப் பகுதியில் இயற்கை எழில்மிக்க வனப்பகுதி பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மேற்குப் பகுதியில் குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அதன் முக்கியத்துவத்தை அறிவியல் ஆய்வுகளும் இயற்கை ஆர்வலர்களும் சுட்டிய பிறகு அதைப் பாதுகாக்க முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.
"தற்போதைய தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எங்கள் கடமை. அதேபோல எதிர்காலத் தலைமுறையினருக்குத் தேவையான வளங்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம்," என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
டோவர் வனப்பகுதியின் மேற்குப் பகுதியில் பல்லுயிர் அம்சங்கள் வளமாக இருப்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. கிழக்குப் பகுதி யைவிட அங்கு பெரிய மரங்களும் அருகிவரும் உயிரினங்களும் இருப்பது தெரியவந்தது.
இரண்டாவது ஆய்வை தேசிய பூங்காக் கழகம் நடத்தியது. அதில் நிபுணர்களின் ஆலோசனை நாடப்பட்டது.
சிங்கப்பூரின் மற்ற வனப்பகுதி களுடன் டோவர் வனப்பகுதி எவ்வாறு இணைகிறது என்பது குறித்து ஆராயப்பட்டது.
புக்கிட் தீமா வனப்பகுதியிலிருந்து டோவர் வனப்பகுதிக்குச் செல்லும் வனவிலங்குகளுக்கு அது முக்கியமான பாதை என்று
ஆய்வில் தெரிய வந்தது.

