உண்மையற்ற செய்தி; எழுதியவரின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் உள்துறை அமைச்சர்

உண்மையற்ற செய்தி; எழுதியவரின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் உள்துறை அமைச்சர்

2 mins read
48869d39-803b-44ca-bcea-5be0f50b8ad6
-

கேடிவி கொவிட்-19 குழு­மத்­தைப் பற்றி உண்­மை­யற்ற செய்­தியை எழு­தி­ய­வ­ரின் நோக்­கம் குறித்து சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

பாலி­யல் காணொ­ளி­களைப் பகிர்ந்­து­கொண்ட டெலி­கி­ராம் குழு­வில் தொடர்­பு­டை­ய­வர் என்று அந்த அறிக்­கையை எழு­திய ஆண்டி வோங் மிங் ஜுன் மீது ஏற்­கெ­னவே குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருப்­பதை அமைச்­சர் சண்­மு­கம் சுட்­டி­னார்.

"அவர் மீது குற்­றம் சுமத்­தி­யி­ருப்­ப­தால் அவர் இந்­தப் பொய்ச் செய்­தி­யைப் பதி­விட்­டுள்­ளாரா என்ற சந்­தே­கம் எழு­கிறது. அவர் எழு­திய அறிக்­கையை நிக்­கெய் பதி­வேற்­றம் செய்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தைத் தரு­கிறது," என்று திரு சண்­மு­கம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

அந்த அறிக்கை இம்­மா­தம் 23ஆம் தேதி­யன்று நிக்­கெய் ஆசியா இணை­யத்­த­ளத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

கேடிவி கொவிட்-19 குழு­மத்­தில் 200க்கும் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் விப­சா­ரத்­தால் ஏற்­படும் தீமை­களை இந்­தக் குழு­மம் வெளிச்­சத்­துக்கு கொண்டு வந்­து­விட்­ட­தாக அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

எவ்­வித விளக்­க­மும் தரா­மல் மீண்­டும் இயங்க கேடிவி விடு­தி­

க­ளுக்­குக் கடந்த ஆண்டு அனு­மதி வழங்­கி­ய­தற்­கான கார­ணம் குறித்து அறிக்கை கேள்வி எழுப்­பி­யது.

குடும்ப உறவு எனக் கூறிக்­கொண்டு பாலி­யல் தொழி­லில் ஈடு­படும் வெளி­நாட்­ட­வர்­கள் சிங்கப்­பூ­ருக்கு வர குடி­நு­ழை­வுக் கொள்­கை­யில் குறை­பாடு இருப்­ப­தாக அறிக்கை குறை­கூ­றி­யது.

இந்­தக் குற்­றச்­சாட்­டு­களை உள்­துறை அமைச்­சின் கூட்டு முயற்­சிக் குழு­வின் திரு சேம் டீ மறுத்­தார். அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த விவ­ரங்­கள் துல்­லி­ய­மற்­றவை என்­றார் அவர்.

பாலி­யல் தொழி­லில் ஈடு­பட சில வெளி­நாட்­ட­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர முயற்சி செய்­வது அதி­கா­ரி­

க­ளுக்­குத் தெரி­யும் என்­றார் திரு சேம் டீ.

இதற்­குச் சிங்­கப்­பூ­ரின் குடி­

நு­ழை­வுச் சட்­டம் இடம் தரு­வ­தில்லை என்­றார் அவர்.

இத்­த­கை­யோர் சிங்­கப்­பூ­ருக்கு வர அனைத்து நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டா­லும் அனை­வ­ரை­யும் தடுத்­திட முடி­யாது என்று திரு டீ கூறி­னார்.

"அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­

பட்­டுள்­ள­வற்றை உள்­துறை அமைச்சு திட்­ட­வட்­ட­மாக மறுத்­து­விட்­டது. அறிக்­கையை எழு­தி­ய­வ­ரின் உயர் நெறி­முறை எதிர்­பார்ப்­பு­ கள் பாராட்­டத்­தக்­கவை. இருப்­பி­னும், உண்­மையை அவர் எழுத வேண்­டும், உண்மை என்று நினைத்­து­க்கொண்டு கற்­ப­னைக் கதை­களை எழு­தக்­கூ­டாது," என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.