அண்மைய கொவிட்-19 கட்டுப்பாட்டு களால் பாதிக்கப்பட்ட திருமணங்கள் தொடர்பாகத் தம்பதியருக்கும் திருமணச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே சட்ட அமைச்சால் வழங்கப்படும் இலவச சமரசப் பேச்சுவார்த்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக சமூக அளவிலான பாதிப்பு அதிகரித்திருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 8ஆம் தேதிக்கும் இம்மாத இறுதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெற இருந்த திருமணங்களுக்கு மட்டும் இந்த இலவச சமரசப் பேச்சுவார்த்தை வழங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த மே மாதம் 8ஆம் தேதிக்கும் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெறும் திரு
மணங்களும் இச்சேவை வழங்கப்படும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சமரசப் பேச்சுவார்த்தை சேவையைப் பெற விரும்புவோர் சேவை நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுடன் தங்கள் விண்ணப்பங்களை இணையம் வழி சட்ட அமைச்சிடம் அக்டோபர் 31ஆம் தேதிக்கும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்த அமைச்சு இலக்கு கொண்டுள்ளது. சமரசப் பேச்சுவார்த்தை இணையம் வழி ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்கு நடத்தப்படும்.
தற்போது திருமண விருந்துபசரிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும் நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக முன்பு போல பலர் கலந்துகொள்ள முடியாது.
இதனால் திருமணம் செய்துகொள்ள இருந்த தம்பதியர் பலர் தங்கள் திட்டங்களை மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களுடன் அவர்களுக்குத் தகராறு ஏற்பட்டது. இலவச
சமரசப் பேச்சுவார்த்தைத் திட்டத்தின்கீழ் பங்கெடுக்க இருதரப்
பினரும் இணங்கினால் சட்ட அமைச்சால் நியமிக்கப்பட்ட பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர், நீதி
மன்றத்துக்குச் செல்ல தேவை எழாமல் தீர்வு காண உதவி செய்வார்.

