தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலினப் பாகுபாடுகளை எதிர்த்து 'அவேர்' பரிந்துரை

2 mins read
c8dfb6f1-b718-4196-b1f9-d351e6bd0415
-

பல்­வகை பாலி­னப் பாகு­பா­டு­களை எதிர்­கொள்ள நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்று மக­ளி­ருக்­கான செயல், ஆய்­வுச் சங்­கம் (அவேர்) அழைப்பு விடுத்­துள்­ளது.

கர்ப்­பி­ணிப் பெண்­கள், ஒற்­றைத் தாய்­மார்­கள், உடற்­கு­றை­உள்ள பெண்­கள், பணிப்­பெண்­கள், 'எல்­ஜி­பி­டி­கியூ' சமூ­கத்­தைச் சேர்ந்த பெண்­கள், முஸ்­லிம் பெண்­கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை முடி­வுக்­குக் கொண்­டு­வர அது குரல் கொடுத்­துள்­ளது.

பாகு­பா­டு­க­ளுக்கு எதி­ரான முழு­மை­யான சட்­டங்­கள் அவ­சி­யம் என்று அவேர் அமைப்பு கூறி­யது. வேலை­யி­டத் துன்­பு­றுத்­தல்­

க­ளுக்கு எதி­ராக முத­லா­ளி­கள் நட­வ­டிக்கை எடுப்­ப­தைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும்.

ஒரே மாதி­ரி­யான வேலைக்கு எவ்­வி­தப் பாகு­பா­டு­மின்றி ஒரே அள­வி­லான சம்­ப­ளத்­தைத் தர வேண்­டும் என்று அவேர் அமைப்பு தனது கருத்தை முன்­வைத்­தது.

பாலி­னச் சமத்­து­வத்­துக்கு அழைப்பு விடுத்து 88 பரிந்­து­ரை­கள் கொண்ட 292 பக்க அறிக்­கையை அர­சாங்­கத்­தி­டம் அவேர் அமைப்பு சமர்ப்­பித்­தது.

இவ்­வாண்டு நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட இருக்­கும் வெள்ளை அறிக்­கை­யில் இது இடம்­பெ­றும்.

விதி­மு­றைக்கு உட்­படா முத­லா­ளி­க­ளுக்கு எதி­ராக நட­

வ­டிக்கை எடுக்க தேசிய கண்­கா­ணிப்­புக் குழு­வான நியா­ய­மான வேலை நடைமுறைகளுக்கான முத்­த­ரப்­புக் கூட்­ட­ணிக்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்க வேண்­டும் என அவேர் அமைப்பு அறி­வு­றுத்­தி­யது.

வேலை­யி­டங்­களில் பெண்­

க­ளுக்கு எதி­ரான பாகு­பா­டு­களை எதிர்­கொள்­ளும் திட்­டம் கர்ப்­

பி­ணிப் பெண்­கள், தாய்­மார்­கள் ஆகி­யோர் மீது மட்­டும் கவ­னம் செலுத்­தக்­கூ­டாது என்று அவேர் கேட்­டுக்­கொண்­டது.

மாறாக, உடற்­கு­றை­யுள்ள பெண்­க­ளுக்கு உதவி செய்­வ­

தி­லும் அது கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அது வலி­யு­றுத்­தி­யது.

வேலை கிடைப்­பது, அதில் நிலைத்­தி­ருப்­பது, படிப்­ப­டி­யாக முன்­னே­று­வது ஆகி­ய­வற்­றில் உடற்­கு­றை­யுள்ள பெண்­கள் அதிக சிர­மங்­களை எதிர்­நோக்­கு­வ­தாக அவேர் கோடிட்­டுக் காட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வெளி­நாட்டுக் கண­வர் அல்­லது மனை­விக்கு நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்டை வழங்­கு­வற்­கான தகு­தி­நி­லையை மேலும் வெளிப்­ப­டை­யா­ன­தாக்க வேண்­டும் என்று அவேர் பரிந்­துரை செய்­தது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சம், சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை ஆகி­ய­வற்­றைப் பெறு­வ­தற்­கான தெளி­வான கால அட்­ட­வ­ணையை அவர்­க­ளுக்­குக் கொடுக்க வேண்­டும் என்று அவேர் கேட்­டுக்­கொண்­டது.

நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்டை வைத்­தி­ருப்­போர் வேலை செய்­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களை நீக்க வேண்­டும் என்று அது கூறி­யது. வெளி­நாட்­டுப் பணிப்­பெண்

­க­ளுக்­கான வேலை நேர­மும் ஓய்வு நேர­மும் நிர்­ண­யிக்­கப்­பட வேண்­டும்.

முத­லா­ளி­க­ளைத் தடை­யின்றி மாற்­றிக்­கொள்­ளும் உரி­மையை அவர்­க­ளுக்கு வழங்க வேண்­டும் என்று அவேர் கூறி­யது.

ஒற்­றைத் தாய்­மார்­கள் வீடு வாங்­கு­வ­தில் சவால்­கள் இருப்­பதை அது சுட்­டி­யது. திரு­ம­ண­மா­காத ஒற்­றைத் தாய்­மார்­களும் அவர்­க­ளது பிள்­ளை­களும் தற்­போது நடப்­பில் உள்ள வீட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்­குத் தகுதி பெறு­வ­தில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, திரு­ம­ண­மா­கா­மல் குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுக்­கும் தாய்­மார்­கள் குழந்தை போனஸ், வரி நிவா­ர­ணம் ஆகி­ய­வற்­றுக்­குத் தகுதி பெறு­வ­தில்லை.

அனைத்து வேலை­யி­டங்­க­ளி­லும் பாரம்­ப­ரிய தலைப்­பாகை அணிந்­து­கொள்ள முஸ்­லிம் பெண்­க­ளுக்கு அனு­மதி வழங்க வேண்­டும் என்று அவேர் அமைப்பு கேட்­டுக்­கொண்­டது.