சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் டிரேஸ்டுகெதர் பயன்பாடு நடப்புக்கு வந்தது டிரேஸ்டுகெதர் இனி கட்டாயம்

சந்தைகள், உணவங்காடி நிலையங்களில் டிரேஸ்டுகெதர் பயன்பாடு நடப்புக்கு வந்தது டிரேஸ்டுகெதர் இனி கட்டாயம்

2 mins read
3186b927-9805-4334-b4d1-64330b26a666
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள எல்லாச் சந்தை­களுக்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கும் செல்­ப­வர்­கள் இனி கட்­டா­ய­மாக டிரேஸ்­டுகெ­தர் செயலி அல்­லது கரு­வி­யைப் பயன்­ப­டுத்தி நுழைய வேண்­டும்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் இதனை நேற்று தெரி­வித்­தது.

டிரேஸ்­டு­கெதர் செயலி அல்­லது கரு­வி­யைப் பயன்­ப­டுத்­தி­னால்­தான் இந்த இடங்­க­ளுக்­குள் நுழைய முடி­யும் என்று சுகா­தார அமைச்சு முன்­ன­தாக ஜூலை 20ஆம் தேதி அறி­வித்­தி­ருந்­தது.

அதனை ஒட்டி, இந்த இடங்­ க­ளுக்­குள் சென்­று­வ­ரு­வோ­ரைக் கண்­கா­ணிக்க சேஃப்என்ட்ரி முறையை நடப்­புக்­குக் கொண்­டு­ வ­ரு­வ­தற்கு, நகர மன்­றங்­கள், சந்­தை­கள், உண­வங்காடி நிலை­யங்­களை நடத்­தும் நிறு­வ­னங்­கள், இதர அமைப்­பு­கள் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து பணி­யாற்­றி­யுள்­ள­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று கூறி­யது.

நேற்­றைய நண்­ப­கல் நில­வ­ரப்­படி ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத் தொற்­றுக் குழு­மத்­தில் 997 தொற்றுச் சம்­ப­வங்­கள் உள்­ளன.

அண்­மைய வாரங்­களில் அங்­கி­ருந்து சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­களில் தொற்று பர­வி­யது. அப்பரவல் சுத்­தம், சுகா­தா­ரத்­தில் உயர்ந்த தரத்­தைக் கடைப் ­பி­டிப்­ப­தன் அவ­சி­யத்­தைக் காட்­டு­வ­தாக வாரி­யம் குறிப்­பிட்­டது.

திறந்த கட்­ட­டங்­க­ளான சந்­தை­களும் உண­வங்­காடி நிலை­யங்­களும் பலர் கட்­டுப்­பாடு அற்று வந்­து­போ­கும் இடங்­கள். அவற்­றில் சேஃப்என்ட்ரி முறையை நடப்­புக்­குக் கொண்­டு­வ­ரு­வது சவா­லானது என்று வாரி­யம் கூறி­யது.

ஆனால் டெல்டா வகைக் கிருமி மிக எளி­தில் பர­வக் கூடிய தன்மை கொண்டது என்­ப­தால், தொற்­றுள்­ள­வர்­கள் யாரு­டன் தொடர்பு கொண்­டுள்­ள­னர் என்­பதை விரைந்து அடை­யா­ளம் காண அதி­கத் தேவை உள்­ள­தாக வாரி­யம் சொன்­னது.

"சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­குள் நுழைய, வாடிக்­கை­யா­ளர்­கள், கடைக்­கா­ரர்­கள், கடை உத­வி­யா­ளர்­கள் அனை­வ­ரும் டிரேஸ்­டு­கெ­தர் கரு­வியை சேஃப்என்ட்ரி இயந்­தி­ரத்­தில் தட்ட வேண்­டும் அல்­லது டிரேஸ்­டு­கெ­தர் செய­லியை வருட வேண்­டும், என்­றது வாரி­யம்.

டிரேஸ்­டு­கெே­தர் முறை­யைப் பயன்­ப­டுத்த உத­வுவதற்கு, சந்­தை­களிலும் உணவங்காடி நிலையங் களிலும் ஊழி­யர்­கள் நிறுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் அது கூறி­யது.