மனிதவள வழிகாட்டி, வேலை நேரத்துக்குப் பிறகான தகவல்தொடர்பு கொள்கை வார்ப்பு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஒன்றான பணியிட அழுத்தத்தை மதிப்பிடுவதற்கான இணையக் கருவி
சிங்கப்பூரர்கள், கடின உழைப்பாளிகள் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. மனிதவள அமைச்சின் அண்மை புள்ளிவிவரங்களின்படி, முழுநேர ஊழியர்கள், கடந்த ஆண்டில் வாரத்திற்கு சராசரியாக 45.4 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஒப்
பிடும்போது, தென் கொரிய மக்கள் வாரத்திற்கு சராசரியாக 44.4 மணி நேரம் வேலை செய்வதாக பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கு கொள்ளைநோய்ப் பரவல் குறைவாகவே உதவியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ''ஆசியான் சந்தைகளில் கொவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம்'' என்ற தலைப்பிலான யூஓபி ஆய்வின்படி, உள்ளூர் ஊழியர்களில் 89 விழுக்காட்டினர் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று நினைக்
கிறார்கள்.
மூன்று பகுதிகளாக வெளிவரும் ஒன்றிணைந்த சிங்கப்பூர் தொடரின் இரண்டாவது பகுதி, ஒரு தேசமாக வலுவுடன் மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராய்கிறது. வேலை- வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி (AfA on WLH) மக்கள் தங்கள் வேலையிலும் வாழ்க்கையிலும் நல்லிணக்கம் காண எப்படி உதவமுடியும் என்பதை ஆராய்கிறது.
வேலையிலும் வாழ்க்கையிலும் நல்லிணக்கம் என்பதை வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி எவ்வாறு வரையறுக்கிறது?
தனிமனிதர்கள் தங்களது வேலையிலும் தனிப்பட்ட வாழ்விலும் திறம்பட இலக்குகளை எட்டுவதே வேலையிலும் வாழ்க்கையிலும் நல்லிணக்கம் என்று வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி விளக்குகிறது.
நான் மனிதவளத் துறையில் (HR) பணிபுரி
கிறேன், எனது பணியிடத்தில் சில வேலை-வாழ்க்கை நல்லிணக்க நடைமுறைகளைச் செயல்படுத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகள் அல்லது வளங்கள் குறித்து வேலை- வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணியை அணுகலாமா?
வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முக்கியத்துவத்தை உணர்த்தவும் முயற்சிகளையும் வளங்களையும் வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி உருவாக்கி வருகிறது. அவை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும். நியாயமான, முன்னேற்றம் காணும் வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கான முத்தரப்புக் கூட்டணியின் (Tafep) இணையத்தளத்தில் இவை பகிரப்படும்.
வர்த்தகங்கள் எவ்வாறு வேலை-வாழ்க்கை நடைமுறைகளைச் செயல்படுத்த முடியும் என்பதற்கான மனிதவள வழிகாட்டி, வேலை நேரத்திற்கு அப்பால் வேலை தொடர்பான தகவல்தொடர்புக்கான வரையறைகளை அமைப்பதற்கான ''வேலை நேரத்துக்குப் பிறகான தகவல்தொடர்பு கொள்கை வார்ப்புரு'' ஆகியவை இதில் அடங்கும். முதலாளிகளும் ஊழியர்களும் இந்த முயற்சிகளையும் வளங்களையும் பயன்படுத்திக்கொள்ள முத்தரப்புப் பங்காளிகளும் ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி (ஏஎஃப்ஏ) உறுப்
பினர்களும் ஊக்கம் கொடுப்பார்கள்.
வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணி பற்றி மேலும் தெரிந்துகொள்ள கியூஆர் குறியீட்டை வருடுங்கள்
மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் குறித்த முத்தரப்பு தரத்தை அறிமுகப்படுத்தின. வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் ஊழியர்களின் முன்னுரிமைகளை அங்கீகரிப்பதற்கும் வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்தைக் காண்பதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நடைமுறைகளை இது வழங்குகிறது.
வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் குறித்த முத்தரப்பு தரத்தை நடைமுறைப்படுத்தவும், மேலும் பயனுள்ள வேலை-வாழ்க்கை வளங்
களைப் பெறவும், Tafep-இன் இணையத்தளத்தையும் (tal.sg/tafep) மனிதவள அமைச்சின் இணையத்தளத்தையும் (mom.gov.sg) முதலாளிகள் காணலாம்.
என் பணியில் வேலை-வாழ்க்கைக்கு உகந்த கலாசாரம் இல்லை. வேலை-வாழ்க்கை நல்லிணக்க நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான மனிதவள வழிகாட்டி, வேலை நேரத்துக்குப் பிறகான தகவல்தொடர்பு கொள்கை வார்ப்புரு, ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஒன்றான பணியிட அழுத்தத்தை மதிப்பிடுவதற்கான இணையக் கருவி ஆகியன குறித்து பரிசீலிக்க எனது முதலாளியை எவ்வாறு ஊக்குவிப்பது?
Tafep-இன் இணையத்தளம் பற்றி உங்களது முதலாளியிடம் நீங்கள் கூறலாம். வேலை-வாழ்க்கை நடைமுறைகளை எவ்வாறு செயல்
படுத்துவது என்பதற்கான வளங்கள் இவை. இதில் தனித்தன்மையான சவால்களை எதிர்கொள்ளும் குறிப்பிட்ட துறைக்கும் வளங்கள் உண்டு.
வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்தில் முத்தரப்பு தரநிலையையோ அல்லது நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளில் முத்தரப்பு தரநிலையையோ அவர்கள் பின்பற்றுமாறு பரிந்துரைக்க உங்கள் முதலாளியை அணுகலாம்.
பிந்தையது 2017 ஆம் ஆண்டில் முதலாளி
களுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நீக்குப்போக்கான வேலைத் தெரிவுகளை வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த முத்தரப்பு தரநிலை
களுக்கு மாறுவதில் முதலாளிகளுக்கு ஆதர
வளிக்க Tafep தொடர் பயிற்சிகளை வழங்குகிறது
நிறுவனங்கள் வேலை-வாழ்க்கை நல்லிணக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதை அரசாங்கம் கட்டாயமாக்குமா?
வெவ்வேறு வாழ்க்கை நிலைகளில் மாறுபட்ட முன்னுரிமைகளைக் கொண்ட தனிமனிதர்களிடையிலும் வர்த்தகங்களிடையிலும் வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் வேறுபடலாம். எனவே, எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான தீர்வுகள் இருக்காது. முத்தரப்பு பங்காளிகள், பணியிடங்களில் வேலை-வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்ற முதலாளிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து ஊக்குவிப்பார்கள்.
வேலை-வாழ்க்கை நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அத்தகைய நடைமுறைகளைச் செயல்படுத்த அவர்களுக்கு வழிகாட்டி வளங்களை வழங்கவும் வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்துக்கான ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல்கூட்டணியுடன் பணிபுரிவது இதில் அடங்கும். முதலாளிகளுக்கு மேலும் ஊக்குவிப்பும் ஆதரவும் வழங்கும் வகையில், இந்த ஆண்டு வேலை-வாழ்க்கை நல்லிணக்கத்தின் முத்தரப்பு தரத்தை நடைமுறைப்படுத்துவோர், மனித மூலதனத்தைக் கண்டறியும் கருவியை (Human Capital Diagnostic Tool) இலவசமாகப் பயன்படுத்தும் வசதியைப் பெறுவர். இந்தக் கருவி, நிறுவனங்கள் தங்களின் மனிதவள செயல்முறைகளின் முதிர்ச்சியை மதிப்பிடுவதற்கும், வர்த்தக, ஊழியர் தேவைகளுக்கு சிறந்த ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் தகுந்த தகவல்களை வழங்குகிறது. இது குறைவாகவே இருப்பதால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
எனது ஊழியர்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா என்பதை நான் எவ்வாறு அடையாளம் காண்பது? பொதுவான அறிகுறிகள் உள்ளதா?
பணியிடத்தில் மன அழுத்தத்தின் காரணங்களை அடையாளம் காண, மார்ச் மாதத்தில் மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்திய iWorkHealth எனும் இணையக் கருவியைப் பயன்படுத்தலாம். இந்த இலவச மதிப்பீட்டு முறையில், ஊழியர்கள் தங்களது உளவியல் நலம் குறித்து சுயமாக ஆய்வு செய்துகொள்வதற்கான கேள்விகள் உள்ளன. இது முதலாளிகள் தங்களின் ஊழியர்களது நல்வாழ்வு குறித்து அறிய உதவும்.
வேலைத் தேவைகள், வேலையில் அங்கீ
காரம், பணியிட கலாசாரம், மேற்பார்வையாளர்கள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவுகள் போன்றவற்றை இக்கேள்விகள் உள்ளடக்கியுள்ளன. ஊழியர்கள் தங்கள் பதில்களைச் சமர்ப்பித்ததும், அவர்களுக்கான அறிக்கையை இக்கருவி உருவாக்கித் தரும். அதோடு, முக்கிய பணியிட அழுத்தங்களை அடையாளம் காட்டும் ஒருங்கிணைந்த, பெயர் குறிக்கப்படாத அறிக்கையை நிறுவனங்களுக்காக உருவாக்கித் தரும்.
இந்த அறிக்கைகளிலும் iWorkHealth இணையத்தளத்திலும் (iworkhealth.gov.sg) பணியிட அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான பரிந்துரைகளும் இடம்பெற்றிருக்கும். ஊழியர்களுடனான உரையாடல்கள், பணியிட கலாசார ஆய்வுகள் போன்றவை மூலமான கருத்துக்கணிப்புகளுடன் இந்தத் தரவைப் பயன்படுத்த முதலாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

