உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை பாதிப்பு

உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை பாதிப்பு

2 mins read
7c259ef0-c50f-4e7e-9515-7a706bb03334
-

டெல்டா வகை கொரோனா கிரு­மித்­தொற்று உல­கெங்­கும் வேக­மா­கப் பரவி வரு­கிறது. இத­னால், உள்­ளூ­ரில் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உயர் கட்­டுப்­பா­டு­கள் சிங்­கப்­பூர் தொழி­லா­ளர் சந்தை ேமம்­பாட்­டுக்கு தடை­யாக விளங்­கக்­கூ­டும் என்று கவனிப்பா­ளர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

இதன் தொடர்­பில், இவ்­வாண்டின் இரண்­டாம் காலாண்­டில் வேலை­யில் இருக்­கும் ஊழி­யர்­

க­ளின் எண்­ணிக்கை 15,700 குறைந்­த­தாக மனி­த­வள அமைச்சு வெள்­ளிக்­கி­ழ­மையன்று வெளி­யிட்ட அறிக்கை கூறு­கிறது. இதில் வெளி­நாட்டு பணிப்­பெண்­கள் எண்­ணிக்கை சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு முந்­தைய காலாண்­டில், நான்கு காலாண்­டு­க­ளாக குறைந்து வந்த வேலை­கள், முதன்­மு­த­லாக வளர்ச்சி கண்­டது.

இது­பற்­றிக் கருத்­து­ரைத்த மனி­த­வள அமைச்­சின் நிரந்­த­ரச் செய­லா­ளர் அவ்­பெக் காம், "இரண்­டாம் காலாண்­டில் வேலை­யில் இருக்­கும் குடி­யி­ருப்­பா­ளர் எண்­ணிக்கை மித­மான வளர்ச்சி கண்­டது.

ஆனால், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கள் ஒப்­பந்­தப்­படி பணியை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­ய­தால் இந்த நிலை மாறி­யது.

"தற்­பொ­ழுது பொதுச் சுகா­தார கார­ணங்­க­ளால் வெளி­நாட்டு ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ருக்கு வர­வ­ழைப்­பது சவால்­மிக்­க­தாக உள்­ளது," என்று விளக்­கி­னார்.

எனி­னும், வேலை­யின்மை விகி­தம் கொரோனா கொள்­ளை­நோய்க்கு முந்­தைய காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­க­மாக இருந்­த­போ­தி­லும், சென்ற மாதம் மேலும் குறைந்­தது என அமைச்சு தெளிவு­ப­டுத்­தி­யது. இதன் தொடர்­பில் கடந்த செப்­டம்­பர் மாதம் உச்­சத்தை எட்­டிய வேலை­யின்மை விகி­தம், அதன்­பின் படிப்­ப­டி­யா­கக் குறை­யத் தொடங்­கி­யுள்­ளது என்­றும் அமைச்சு கூறு­கிறது.

சிங்­கப்­பூர் தனது தடுப்­பூசி போடும் இலக்கை நோக்கி முன்­னே­றி­ வ­ரு­வ­தால் அதைத் தொடர்ந்து கட்­டுப்­பா­டு­களும் நாள­டை­வில் தளர்த்­தப்­டும்.

இத­னால், ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் வேலை­யின்மை விகி­தம் தொடர்ந்து கீழ்­நோக்­கிச் செல்­லும் என்று கூறு­கி­றார் எடி­டி­எக்ஸ் எனப்­படும் மின்­னி­லக்க பங்­குப் பரி­வர்த்­தனை நிறு­வ­னத்­தில் முத­லீட்­டுச் சந்­தைப் பிரி­வில் மூத்த துணைத் தலை­வ­ராக உள்ள சேமு­வல் கான்.

"ஆனால், உரு­மா­றிய டெல்டா வகைக் கிருமி, அர­சாங்க ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் முடி­வுக்கு வரு­வது போன்­றவை வேலை­வாய்ப்பு சூழ­லில் இருக்­கும் ஆபத்­து­கள்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, உல­கில் பெருகி­வ­ரும் கொவிட்-19 தொற்று, அதைத் தொடர்ந்து எடுக்­கப்­பட்­டுள்ள கடு­மை­யான கட்­டுப்பாட்டு நட­வ­டிக்­கை­கள் போன்­ற­வற்­றால் ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் போக்­கில் சுணக்­கம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சின் அறிக்கை கூறு­கிறது.

மனி­த­வள அமைச்சு சென்ற மாதம் நடத்­திய ஆய்­வில் பங்­கேற்ற 64% நிறு­வ­னங்­கள் தாங்­கள் ஊழி­யர் ஆட்­சேர்ப்­பில் ஈடு­ப­டப்­போ­வ­தாக தெரி­வித்­தன.

ஒப்­பு­நோக்க, இந்த விகி­தம் கடந்த மார்ச் மாதம் 73 விழுக்­கா­டாக இருந்­த­தை­யும் அமைச்­சின் அறிக்கை சுட்­டிக்­காட்­டு­கிறது.

இந்­நி­லை­யில், உயர் கட்­டுப்­பாடு­கள் நீண்­ட­நாள்­கள் நீடிப்­ப­தால் ஏற்­படும் விளை­வு­கள் குறித்து ஆய்­வா­ளர்­கள் கவலை தெரி­வித்­து உள்ள­னர்.