கிளமெண்டி வனப்பகுதியின் சில இடங்கள் பாதுகாக்கப்படும். இங்கு இரண்டு இயற்கை வழித்தடங்கள் அமைக்கப்படும் என்று தேசிய பூங்ககாக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்த செழுமையான வனப்
பகுதியும் அங்குள்ள விலங்கினமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்பொழுது இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிளமெண்டி வனப்பகுதியில் உள்ள ஒரு நதியை ஒட்டி இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை வழித்தடத்தின் ஒரு பகுதி அமையும். இது அங்கு உள்ள ரயில் தண்டவாளப் பகுதியுடன் இணைந்து டோவர் வனப்பகுதியில் அமையவுள்ள மற்றொரு இயற்கைப் பூங்கா பகுதியுடன் சேரும்.
மற்றோர் இயற்ைக வழித்தடம் பழைய ஜூரோங் இயற்கைத் தடம் என்ற பெயருடன் பழைய ரயில் தடம், அதை ஒட்டிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் வழி அமையும். இது 2024ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக கட்டி முடிக்கப்படும் என்று கழகம் கூறியது.
இந்த இரண்டு தடங்களும் புதிதாக அமையவுள்ள 3 கிலோமீட்டர் பூங்கா இணைப்புப் பாதை வழி ஜூரோங் ஏரிப் பூங்காப் பகுதியை இணைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், தற்பொழுது அமையவுள்ள இந்த இரண்டு இயற்கை வழித்தடங்கள், ஏற்கெனவே உள்ள பசுைமத் தடங்கள், பூங்கா இணைப்புப் பாதைகள் போன்றவை சிங்கப்பூரின் மேற்குப் பகுதிவாழ் மக்களுக்கு 18 கிலோமீட்டர் நீளமுள்ள தடங்களை வழங்கும் என்பதை கழகம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த இயற்கை வழித்தடங்கள் பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் காணொளிவழி நேற்று பங்கேற்ற தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இவ்விரண்டு தடங்களின் மூலம் சிங்கப்பூரர்கள், உயிர் பன்முகத்தன்மைக்கு குைறவான பாதிப்புடன், பாதுகாப்பான முறையில் பசுமை நிலப்பரப்பை கண்டு களிக்க முடியும் என்றார்.
அதேவேளையில் நாட்டின் மரபுடமையும் பாதுகாக்கப்படும் என்று விளக்கிய அமைச்சர், பழைய ஜூரோங் இயற்ைகத் தடத்தில் இயற்கை அழகுடன் மரபுடமையும் சேர்ந்துள்ளதால் சிங்கப்பூரர்கள் இரண்டையும் ஒருசேர அனுபவிக்க லாம் என்பதையும் சுட்டினார்.
சிங்கப்பூரின் வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய ஆர்வலர்களால் கிளமெண்டி, டோவர் வனப்பகுதிகள் மீது அக்கறை எழுந்தது.

