புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்களை நேற்று காலை கனீர் என்ற குரல் தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியது.
கொவிட்-19 சுய பரிசோதனை சாதனங்களைப் பெற்றுக்கொள்ளும்படி அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா ஒலிபெருக்கி மூலம்
கேட்டுக்கொண்டார்.
"ஞாயிற்றுக்கிழமை காலையில் உங்கள் அனைவருக்கும் தொந்
தரவு கொடுப்பதற்கு என்னை மன்னிக்கவும். கொவிட்-19 சுய பரிசோதனை சாதனங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்க விரும்பு கிறேன்," என்று காலை 10.50 மணி அளவில் திரு லியாங் அறிவித்தார்.
தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுவதைக் கேட்க குடி
யிருப்பாளர்கள் தங்கள் சன்னல் அருகில் கூடினர்.
திரு லியாங் தமது அறிவிப்பை முடித்ததும் நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் கரவொலி எழுப்பினர்.
அடுத்த பத்து நிமிடங்
களுக்குள் கொவிட்-19 சுய பரிசோதனை சாதனத்தைப் பெற்றுக்கொள்ள புளோக் 443 ஃபஜார் சாலையில் அமைக்கப்பட்ட கூடத்துக்குக் குடியிருப்பாளர்கள் சிலர் புறப்பட்டுச் சென்றனர்.
446 ஃபஜார் சாலையில் உள்ள ஃபஜார் சந்தை, 497 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் உள்ள சந்தை ஆகியவற்றுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சுய பரிசோதனை சாதனங்களை விநியோகிக்க மக்கள் கழகத்துடன் இணைந்து செயல்படுவதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் இரவு தெரிவித்தது.
விநியோகம் செய்வதற்காக 30,000க்கும் அதிகமான சுய பரிசோதனை சாதனங்கள் தயார்நிலையில் உள்ளதாக திரு லியாங் கூறினார்.
சுய பரிசோதனை சாதனங்களை விநியோகிக்கும் பணியில் தொண்டூழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி 30லிருந்து 40 குடியிருப்பாளர்கள் மட்டுமே சாதனங்களைப் பெற்றுக் கொள்ள வந்ததால் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாக திரு லியாங் கூறினார்.

