போட்டி மிகுந்ததாகக் கருதப்படும் 2சி கட்ட தொடக்கநிலை 1 பதிவு நேற்று தொடங் கியது. ஏழு கட்டங்களில் ஐந்தாவது பதிவின்போது எவ்வித முன்னுரிமையையும் அனுபவிக்காத சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்கானது. மேலும் பள்ளிக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அடிப்படையில் இந்தப் பதிவு அமைகிறது. முந்திய கட்டங்
களைக் காட்டிலும் இந்தக் கட்டத்தில்தான் அதிகமான பள்ளிகள் குலுக்கல் முறை தேர்ந்தெடுப்பைக் கையாளும். கடந்த ஆண்டு 99 பள்ளிகள் இந்த 2சி கட்டப் பதிவை குலுக்கல் முறையில் நடத்தின. அதேநேரம் 2பி-க்கு 22 பள்ளிகளும் 2ஏ2 பதிவுக்கு 14 பள்ளிகளும் குலுக்கல் முறையைப் பயன்படுத்தின. மாணவர் சேர்க்கையில் இடம்வகிக் கும் 186 பள்ளிகளுள் கிட்டத்தட்ட பாதி அளவு அல்லது 101 பள்ளிகளில் கடந்தாண்டு 2சி பதிவின்போது காலி இடத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன.
இவ்வாண்டு பதிவுப் பட்டியலில் 181 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 12 பள்ளிகளில் தலா 20 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. நாளை மாலை 4.30 மணி வரை இணையம் வாயிலாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம். முடிவுகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியாகும்.

