தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கடி காலத்தின்போது 3,000க்கும் மேற்பட்டோர் உதவ முன்வந்துள்ளனர்

1 mins read
c8338f1f-75c0-406c-a530-4ea42769c09a
நெருக்கடி காலத்தில் உதவும் திறனை மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக 'எஸ்ஜிசெக்யூர்' திட்டம் தொடங்கப்பட்டது. கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் 'எஸ்­ஜி­செக்­யூர்' (SGSecure), 'மைரெஸ்­போன்­டர்' (MyResponder) செய­லி­கள் மூலம் மருத்­துவ உதவி தேவைப்­ப­டு­வோர் அல்­லது தீச்­சம்­ப­வங்­களில் சிக்­கி­யோர் பற்றி அறிந்து அவர்­க­ளுக்கு உதவ, 3,000க்கும் மேற்­பட்­டோர் முன்­வந்­த­னர் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது. நவம்­பர் 2019 முதல் இவ்­வாண்டு மே வரை பதி­வான எண்­ணிக்கை இது என்று கூறப்­பட்­டது.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக 2016ல் 'எஸ்­ஜி­செக்­யூர்' திட்­டம் தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. முத­லு­தவி வழங்­கு­த­லை­யும் இதர நெருக்­கடி காலத் திறன்­களை அறிந்­திருத்­தலை மக்­க­ளி­டையே ஊக்­கு­விப்­பது இதன் நோக்­கம். இத்­த­கைய திட்­டத்­தின்­கீழ் இணை­யும் பொது­மக்­கள், தங்­கள் அருகே 400 மீட்­டர் தொலை­வுக்­குள் ஏற்­படும் ஒரு நெருக்­க­டிச் சூழல் குறித்து செய­லி­கள் வழி அறிந்­தி­டு­வர். பின்­னர் வரை­ப­டம் கொண்டு நெருக்­கடி எங்கு நிகழ்ந்­துள்­ளது என்­ப­தை­யும் செயலி காட்­டும்.

இந்­நி­லை­யில், பதி­வு­செய்­து­கொண்­டோ­ருக்கு 6,000க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­கள் குறித்த தக­வல்­கள், செய­லி­கள் மூலம் அனுப்­பப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்­தது. 'மைரெஸ்­போன்­டர்' செய­லியை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நிர்­வ­கித்து வரு­கிறது.

ஒரு­வ­ருக்கு மார­டைப்பு ஏற்­படு­வது முதல் தீவி­ரம் அல்­லாத தீச்­சம்­ப­வம் நிகழ்­வது வரை செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­துள்­ளோருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­படும். நெருக்­கடி குறித்­துத் தக­வல் பெற, ஒரு­வர் தம் கைபே­சி­யில் இரு செய­லி­க­ளை­யும் இயக்­கவோ அவற்­றைத் திறந்து வைத்­தி­ருக்­கவோ தேவை­யில்லை என்­றும் கூறப்­பட்­டது.

தக­வ­லைப் பெறக்­கூ­டிய கைபேசி, இணைய வசதி, இருக்­கும் இடத்­தைச் செய­லி­கள் அறிந்­திட அனு­மதி வழங்கி இருத்­தல் ஆகி­யவை உத­விக்­க­ரம் நீட்ட விரும்­பு­வோ­ருக்கு இருக்க வேண்­டும் என்­றது அமைச்சு.