மருத்துவமனைகளில் 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
ef5e19e4-fd7f-4f01-bd1d-97275af1cf4c
-

கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ நிலை­யங்­களில் மொத்­தம் 16 ஊழி­யர்­க­ளுக்­கும் நோயா­ளி­க­ளுக்­கும் கிருமித் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

காலஅட்டவணை படி­யான, வழக்­க­மான பரி­சோ­த­னை­க­ளின்­போ­தும் தொற்று அறி­குறி உள்ள ஊழி­யர்­கள் மருத்­து­வ­ரைச் சென்று பார்த்­த­போ­தும் அவர்­க­ளுக்­குத் தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக சுகாதார அமைச்சில் மருத்­து­வச் சேவை­கள் இயக்குநர் டாக்­டர் கென்­னத் மாக் நேற்று கூறி­னார். கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சு­கள் நிலைப் பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

ஈசூன் சமூக மருத்­து­வ­மனை, சாங்கி பொது மருத்­து­வ­மனை ஆகி­ய­வற்­றில் இந்த வாரம் ஏற்­பட்ட தொற்­றுக் குழு­மங்­களில் மொத்­தம் ஏழு பேருக்குத் தொற்று. முந்­தைய வாரத்­தில், சாங்கி மருத்­து­வ­ம­னை­யில் 20 பேர் கொண்ட தொற்­றுக் குழு­மத்­தில் இருந்­தோர் குண­ம­டைந்து குழு­மம் மூடப்­பட்­டது.

மருத்­து­மனை ஊழி­யர்­கள் அனை­வ­ரும் பொருத்­த­மான தனிப்­பட்­டப் பாது­காப்பு ஆடை­களை அணிந்­தி­ருந்­ததாக டாக்­டர் மாக் குறிப்பிட்டார். தொற்று ஏற்­பட்ட ஊழி­யர்­க­ளின் வழி நோயா­ளி­க­ளுக்­குத் தொற்று பர­வி­ய­தாக சான்று ஏதும் இல்லை.

தொற்று ஏற்­பட்ட நோயா­ளி­கள் மருத்­து­வ­ம­னை­யில் சேர்ந்­த­போது பரி­சோ­த­னை­களில் தொற்­றில்லை என்று காட்டியபோதும், அவர்களுக்குள் கிருமி சிறிதாக வளர்ந்து கொண்டிருக்கலாம் என்று டாக்டர் மாக் கூறினார்.