சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திற்கு வந்த புகார்கள் குறைந்தன

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்திற்கு வந்த புகார்கள் குறைந்தன

1 mins read
f2c5438a-fc40-4cf1-b797-668c064e4e1a
-

சென்ற ஆண்டு முற்­பா­தி­யில் பதிவா­ன­தைக் காட்­டி­லும் இந்த ஆண்­டின் முற்­பா­தி­யில் பயனீட்டாளர்­க­ளி­ட­மி­ருந்து வந்த புகார்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­தாக சிங்­கப்­பூர் பயனீட்டாளர் சங்­கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளுக்கு மக்­கள் தங்­க­ளைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொண்டதே அதற்­குக் கார­ணம்.

இந்த ஆண்டு முற்­பா­தி­யில் 7,260 புகார்­கள் வந்­த­தா­கப் பய­னீட்­டா­ளர் சங்­கம் கூறி­யது.

சென்ற ஆண்டு இதே கால­கட்­டத்­தில் பதி­வான எண்­ணிக்கையுடன் ஒப்­பி­டு­கை­யில் அது 19.5 விழுக்காடு குறைவு.

பயண, சுகா­தா­ரத் துறை­களைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு எதி­ரான புகார்­கள் கணி­ச­மா­கக் குறைந்தன.

சென்ற ஆண்டு முற்­பா­தி­யில் இந்த நிறு­வ­னங்­களுக்கு எதிராகத்தான் ஆக அதி­க­மான புகார்­கள் கொடுக்கப்­பட்­டன.

உதாரணமாக, பய­ணத் துறை நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரான புகார்­க­ளின் எண்­ணிக்கை 1,138லிருந்து 406ஆகக் குறைந்­தது.

கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடாதது இதற்குக் காரணமாக இருக்­கும் எனச் சங்கம் கூறி­யது.