கொரோனா குறுக்கிட்டாலும் கொண்டாட்டத்திற்கும் குதூகலத்திற்கும் குறைவில்லை

1 mins read
86f119ee-7a90-4eb2-b4d4-638d0fe7e866
எப்போது வரும் என்று ஆங்காங்கே காத்திருந்த மக்கள் தேசிய கொடியுடன் ஹெலிகாப்டர்கள் வானை அலங்கரித்தபோது பலரும் அதனைக் கண்டு உற்சாகமடடைந்தனர். சிங்கப்பூருக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.(இடது படம்) மரினா பே மிதக்கும் மேடையில் இருந்த தலைவர்கள், விண்ணில் தோன்றிய இருவண்ணக் கொடியையும் அணிவகுத்துச் சென்ற ஹெல்காப்டர்களையும் படம் பிடித்தனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

56வது தேசிய தின அணிவகுப்பைக் காண, குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பார்வை யாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். காரணம் கொரோனா கொள்ளைநோய். கட்டுப்பாடுகளுடன் சடங்குபூர்வ அணிவகுப்பு வெற்றிகரமாக நடந்தேறியது. நாட்டின் தலைவர்கள், கொரோனா சவாலை தோளில் சுமந்து பணியாற்றும் முன்களப் பணியாளர்கள், சவாலை முறியடிப்பதில் துணைநிற்கும் அத்தியாவசியத் துறைப் பணியாளர்கள் போன்றோர் மரினா பே மிதக்கும் மேடைக்கு அணிவகுப்பைக் காண நேரில் வந்திருந்தனர். சிங்கப்பூர் தேசத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் காண ஆர்வம் மிகுந்திருந்தபோதிலும் கட்டுப்பாடுகள் காரணமாக பலரும் தங்கள் வீட்டில் தொலைக்காட்சிவழி அணிவகுப்பின் அழகையும் மிடுக்கையும் கண்டு பரவசமுற்றனர். அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பக்கபலமாகப் பறக்க, தேசிய கொடியை தீவு முழுதும் பறக்கவிட்டபடி சினூக் ஹெல்காப்டர் சென்றபோது வானில் தோன்றிய அந்த அற்புதத்தைப் பலரும் தங்களது கைபேசிகளில் படமாக்கினர்.