சிங்கப்பூர்வாசிகளில் 61 பேர் புதிதாக பாதிப்பு

சிங்கப்பூர்வாசிகளில் 61 பேர் புதிதாக பாதிப்பு

1 mins read
f381ef20-7918-44f4-a52e-ce982cb3e35e
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி உள்­ளூ­ரில் 61 பேருக்கு புதி­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

இவர்­களில் 33 பேர் இதற்கு முன்­னர் நோய் தொற்­றி­யோ­ரு­ட­னும் தனிமை உத்­த­ர­வில் இருந்­தோ­ரி­ட­மும் தொடர்­பில் இருந்­த­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதர 17 பேருக்­கும் இது­போல் எந்­தத் தொடர்பு இல்­லாத நிலை­யில் நோய் தொற்­றி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. மேலும், நேற்று அறி­விக்­கப்­பட்ட 61 பேரில் 70 வய­தைக் கடந்த மூவர் இடம்­பெற்­றி­ருந்­த­னர். அவர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் அல்­லது ஒரு முறை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள். நோய் தொற்­றும் அபா­யம் இவர்­

க­ளுக்கு அதி­கம் என்று அமைச்சு தனது முதற்­கட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த இரு­வ­ருக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மொத்­த­மாக நேற்று அறி­விக்­கப்­பட்ட 63 சம்­ப­வங்­க­ளை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் இது­வரை பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 65,951க்கு அதி­க­ரித்­துள்­ளது.

செவ்­வாய்க்­கி­ழமை வரை தொடர்ந்து ஐந்து நாட்­க­ளாக குறைந்து வந்த உள்­ளூர் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் நேற்று சற்று அதி­க­ரித்­தன. உள்­ளூ­ரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை நேற்று முன்­தி­னம் 53 என அறிவிக்­கப்பட்­டி­ருந்­தது.