சொத்துச் சந்தை முதலீட்டுக்கு தலைசிறந்த இடம் சிங்கப்பூர்
சிங்கப்பூர் சொத்துச் சந்தையின் முதலீட்டு நடவடிக்கை இவ்வாண்டின் முதல் பாதியில் இரட்டிப்பானது. அதன் மதிப்பு 4.7 பில்லியன் டாலர் (S$6.4 பில்லியன்). இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 97 விழுக்காடு அதிகம். ஆசிய-பசிபிக் மூலதன நிலவர அறிக்கை இதனைத் தெரிவித்தது. ரியல் கேப்பிட்டல் அனலிட்டிக்ஸ் (ஆர்சிஏ) நிறுவனம் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டது. இவ்வாண்டின் ஜூன் மாதம் வரை சிங்கப்பூருக்கு வந்த முதலீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை எல்லை கடந்த முதலீட்டாளர்களிடம் இருந்து வந்தவை என அது குறிப்பிட்டது. மேலும் இவ்வாண்டின்
முதலீட்டு நடவடிக்கைகள் சிங்கப்பூரின் மூன்றாவது பெரிய அளவு. அதே நேரம் வெளிநாட்டினரின் சொத்துச் சந்தை முதலீட்டுக்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதன்முறையாக முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது என
ஆர்சிஏ கூறியுள்ளது.
மதுபான விற்பனை கட்டுப்பாடுகளைத் தளர்த்த கடைக்காரர்கள் கோரிக்கை
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களைக் கவர இசையை ஒலிபரப்பவும் மதுபானம் விற்க இரவு 10.30 மணி வரை அனுமதி என்பதை நள்ளிரவு வரை நீடிக்கவும் உணவு, பானக் கடைக்காரர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர். உணவகங்களில் உணவு உட்கொள்ள போடப்பட்ட தடை நீக்கப்பட்டதை வரவேற்றபோதும்
வேலை ஆதரவு மற்றும் வாடகை நிவாரணத்திற் கான உதவித் தொகைகளை முன்கூட்டியே வழங்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிங்கப்பூர் இரவுநேர வர்த்தக சங்கமும் 500 கடைகளைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் காக்டேல் பார் சங்கமும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 10) கூட்டாக அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில் இந்தக் கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன. பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அந்தச் சங்கங்கள் பொருளி யல் மறுதிறப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மேலும் சில சினோவேக் தடுப்பூசிகள் விரைவில் வரும்
அடுத்தகட்ட சினோவேக் கொவிட்-19 தடுப்பூசிகள் 4-6 வாரங்களுக்குள் சிங்கப்பூர் வந்தடையும் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தற்போது அரசாங்க இருப்பில்
200,000 தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்தை பெறுவதற்குத் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு உதவிவருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க இருப்பில் உள்ள தடுப்பு மருந்துகளில் மொத்தம் 170,000 தடுப்பு மருந்துகள் 31 தனியார் சுகாதார நிறுவனங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 85,000 பேர் இலவசமாகத் தடுப்பூசி பெறுவர். எஞ்சிய 30,000 தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட சிங்கப்பூரர்களுக்காகவும் நிரந்தர வாசிகளுக்காகவும் நீண்டகால அனுமதியுடையவர்களுக்காக வும் மற்றவர்களுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மற்றவர்கள் பிரிவில் அடங்குவோரைப் பற்றிய விவரங்களை அமைச்சு தெரிவிக்கவில்லை.

