தெம்பனீஸில் தனது உறவினர்களின் வீட்டில் தங்கியிருந்தபோது 18 வயது பெண் குளிப்பதைக் காணொளியில் பதிவுசெய்ததை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வயது 32. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், குற்றவாளியின் சகோதரரின் மனைவி. தடை உத்தரவு இருப்பதால் குற்றவாளியின் பெயர் வெளியிடப்படவில்லை.
பெண்ணை மானபங்கப்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
சம்பவம் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அடுத்த மாதம் 13ஆம் தேதியன்று குற்றவாளிக்குத் தீர்ப்பளிக்கப்படும். பெண்ணை மானபங்கப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

