தேசிய சேவை ஆற்றாத 24 வயது ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் குற்றத்திற்காக சிறைத் தண்டனையைப் பெறும் 18வது நபர்.
தகுந்த அனுமதி இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி ஐந்தாண்டுகளுக்கு வெளிநாட்டில் இருந்த குற்றத்திற்காக முகமது சரியான் முகமது யாசிடுக்கு 10 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோல் அனுமதியின்றி ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் இருந்ததாகச் சுமத்தப்பட்டிருந்த மற்றொரு குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டது.

