கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது உபசரிப்புத் துறையைச் சேர்ந்த ஏறக்காழ 2,000 ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்டனர்.
இந்த ஊழியர்கள் நேற்று இணையம் வழி நடத்தப்பட்ட விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த மெய்நிகர் விழாவுக்கு உணவு, பானத் துறை ஊழியர்களுக்கான சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் 34 ஹோட்டல்கள், 15 அரசாங்க அமைப்புகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கௌரவிக்கப்பட்டவர்களில் திரு அக்பர் கான் உமர் கானும் ஒருவர். கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கியதற்கு முன்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலான கிராண்ட் ஹயட்டில் பணிபுரிந்தார்.
கடந்த ஆண்டு கிருமிப்
பரவலை முறியடிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
எனவே, தற்காலிகமாக வேறு ஒரு நிறுவனத்தில் சேர்ந்து முன்
களப் பணியாளராகப் பணிபுரியும் தெரிவை கிராண்ட் ஹயட் ஹோட்டல் தனது ஊழியர்களுக்கு வழங்கியது.
பாதுகாப்பு இடைவெளி தூதர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் ஊழியர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்யும் ஊழியர்கள், பேரங்காடி விற்பனை உதவியாளர் போன்ற தெரிவுகள் வழங்கப்பட்டன.
முன்களப் பணியாளர் வேலையில் ஈடுபட விரும்பாத சில ஊழியர்களை விடுப்பில் செல்லுமாறு ஹோட்டல் கேட்டுக்கொண்டது. சிலர் ஹோட்டலின் மற்ற பிரிவு
களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.
48 வயது திரு அக்பர் ஃபேர் பிரைஸ் பேரங்காடியில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றினார்.
அதுமட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் பாதுகாப்பு நிர்வாக ஆய்வாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
தற்போது அவர் மீண்டும் கிராண்ட் ஹயட் ஹோட்டலில் பணிபுரிகிறார்.
ஊழியர்களைக் கௌரவப்படுத்தும் மெய்நிகர் விழாவில் உணவு, பானத்துறை ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசகரும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு கிறிஸ்டஃபர் டி சூசா கலந்துகொண்டார்.
சில துறைகளில் ஊழியர்
பற்றாக்குறை ஏற்பட்டதால் மற்ற துறைகளைச் சேர்ந்த ஊழியர்களை அங்கு வேலையில் அமர்த்தியதாக அவர் தெரிவித்தார்.
"நிலைமையை ஊழியர்கள் நன்கு புரிந்துகொண்டனர். அவர்கள் சுயநலமின்றி நடந்துகொண்டனர். மற்ற நிறுவனங்களில் தற்காலி கமாகப் பணியாற்ற அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். முன்
களப் பணியாளர்களாக அவர்கள் அயராது உழைத்தனர். சமூகத்தினரின் பாதுகாப்புக்கு அவர்கள் பங்
களித்தனர்," என்றார் திரு கிறிஸ்டஃபர்.

