தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுபான விற்பனை விதிமீறல்; உணவகத்துக்கு எதிராக நடவடிக்கை

1 mins read
b9ea66c9-8e7d-412b-9c2b-43378a7fa2a2
-

கடை­யின் பிர­தான நுழை­வா­யிலை மூடி இரவு 10.30 மணிக்­குப் பிறகு மது­பா­னம் விற்றதாகக் கூறப்படும் உண­வ­கத்­துக்கு எதி­ராக

நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கிறது.

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு மதுபானம் விற்கப்படுவது அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்க உணவகம் அவ்வாறு செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையம் கூறியது.

மது­பான விற்­பனை விதி­

மு­றையை மீறி­ய­தற்­காக 28 பீட்டி சாலை­யில் உள்ள 'டார்ட்ஸ் படி' எனும் உண­வ­கம் மீது குற்­றச்­சாட்டு பதி­வா­கும் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­கிறது. கடந்த ஜன­வரி மாதம் 29ஆம் தேதி­யன்று அந்த உண­வ­கத்­தின் பின் வாசல் வழி­யாக வாடிக்­கை­யா­ளர்­கள் வரு­வ­தும் போவ­து­மாக இருப்­பதை பாது­காப்பு இடை­வெளி அதி­கா­ரி­கள் கண்­ட­னர். குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் உண­வ­கத்­தின் உரி­மை­யா­ள­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் $10,000 வரை

அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.