கொவிட்-19 விதிமுறைகளை மீறியது தொடர்பாக 21 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் 54 வயது பூன் சியூ யோக், அவற்றை ஒப்புக்கொள்ள இருந்தபோது அவரைப் பிரதிநிதிக்க வழக்கறிஞர் திரு ஏமஸ் சாய் கடைசி நேரத்தில் நீதிமன்றத்துக்கு நேற்று வந்தார்.
நீதிமன்றத்தை அடைந்த திரு சாய், பூனிடம் பேசி அவரைப்
பிரதிநிதிப்பதை உறுதி செய்துகொண்டார்.
பூனின் குடும்பத்தார் தமது சேவைகளை நாடியதாக திரு சாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பூனிடம் இன்று தனிப்பட்ட முறையில் பேச அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வழக்கை இரண்டிலிருந்து மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி நீதிமன்றத்தை திரு சாய் கேட்டுக்கொண்டார்.
வழக்கு விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் இன்று நடை
பெறும் என்று மாவட்ட நீதிபதி கெரல் லிங் தெரிவித்தார்.
பூன்னை திரு சாய் பிணையில் எடுக்க முயன்றார். ஆனால் பிணை மனுவை நீதிபதி லிங் நிராகரித்துவிட்டார்.

