தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தின் புதிய நிலையங்களை பொதுமக்கள் பார்க்கலாம்

2 mins read
7d5b46e5-7d6d-4c8e-8d36-7101bc20a9da
-

ஆகஸ்ட் 28ஆம் தேதி அதி­கா­ர­பூர்வ திறப்­பு­விழா காண­வுள்ள தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் (டிஈ­எல் ஆறு புதிய நிலை­யங்­களை பொது­மக்­கள் முன்­கூட்­டியே ஆகஸ்ட் 23 முதல் 27 வரை மெய்­நி­க­ரில் பார்க்­க­லாம்.

கொவிட்-19 சூழ்­நிலை கார­ண­மாக இணை­யம் வழி­யாக நிலை­யங்­கள் பொதுமக்­கள் பார்­வைக்­குத் திறக்­கப்­ப­டு­வ­தாக நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் இரண்டாம் கட்டம் (டிஈ­எல்2) என பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்தப் புதிய ரயில் பாதை­யில் அமைந்­துள்ள ஸ்பி­ரிங் லீஃப், லெந்­தோர், மேஃபிள­வர், பிரைட் ஹில், அப்­பர் தாம்­சன், கால்­டி­காட் ஆகிய நிலை­யங்­கள் இப்­போது திறக்­கப்­படு­கின்­றன. உட்­லண்ட்ஸ் நார்த், உட்­லண்ட்ஸ், உட்­லண்ட்ஸ் சவுத் ஆகிய மூன்­றும் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் திறக்­கப்­பட்­டன.

இப்­பா­தை­யில் இரு போக்­கு­வரத்து சந்­திப்பு நிலை­யங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. கால்­டி­காட் வட்ட ரயில் பாதை­யு­டன் இணைக்­கிறது. கட்­டப்­ப­ட­வுள்ள குறுக்கு ரயில் பாதை­யு­டன் பிரைட் ஹில் இணைக்­கிறது.

புதிய நிலை­யங்­களில் கட்­ட­டச் சிறப்பு, அதில் இடம்­பெற்­றுள்ள அம்­சங்­கள், அவ­ச­ர­கா­லத்­தில் குடிமைத் தற்­காப்­பின் பதுங்­கு­மிடங்­க­ளாக அவை எவ்­வாறு செயல்­படும், நிலை­யங்­க­ளைச் சுற்­றி­யுள்ள காட்­சி­கள் போன்­றவை குறித்த முன்­னோட்­டத்தை இந்த மெய்­நி­கர் காட்­சி­யில் காண­லாம்.

இப்­பா­தை­யின் கட்­டு­மா­னத்­தின்­போது எதிர்­கொண்ட சவால்­கள் பற்றி பொறி­யி­ய­லா­ளர்­கள் கூறும் கதை­க­ளை­யும் கேட்­க­லாம்.

மேலும், தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் (டிஈ­எல்) பெட்­டியை உரு­வாக்­கும் பயி­ல­ரங்கு, பொது­மக்­கள் பங்குபெறும் ஃபேஸ்­புக் நேரடி நிகழ்­வு­களும் இடம்­பெ­று­கின்­றன.

மேல் விவ­ரங்­க­ளை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் https://go.gov.sg/TEL2OH என்ற இணை­யத்­த­ளத்­தில் காண­லாம்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை 2 கடந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் திறக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது. ஆனால் தொற்­று­நோய் பர­வல், கடந்த டிசம்­பர் மாதம் டிஈ­எல்1 பாதை­யில் ஏற்­பட்ட முக்­கிய சமிக்ஞை கோளாறு கார­ண­மாக ரயில் கட்­ட­மைப்பு மென்­பொருள் மறு­ஆய்வு போன்­றவை கார­ண­மாக தாம­தம் ஏற்­பட்­டது.

டிஈ­எல்1, டிஈ­எல்2 ரயில் பாதை­கள் கிட்­டத்­தட்ட 100,000 குடும்­பங்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார்.

43 கிலோ மீட்­டர் நீளம் கொண்ட தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் 32 நிலை­யங்­களும் 2025 இல் முழு­மை­யாக நிறை­வ­டை­யும்­போது சரா­ச­ரி­யாக அன்­றா­டம் 500,000 பய­ணி­களை இது பெற்றி­ருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. நீண்ட காலத்­தில் இந்த எண்­ணிக்கை ஒரு மில்­லி­ய­னாக உய­ரும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது.

உட்­லண்ட்­ஸி­லி­ருந்து சுங்­கை பிடோக் வரை செல்­லும் இந்த ரயில் பாதை, வர­வுள்ள சிங்­கப்­பூருக்­கும் ஜோகூர் பாரு­வுக்­கும் இடை­யி­லான இணைப்­பு ரயில் பாதை­யை­யும் இணைக்­கும்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையை நிர்­மா­ணிக்க $25 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மாக செல­வா­கும் என்று முன்­னாள் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் கோ பூன் வான் கூறி­யி­ருந்­தார்.