'இன, மத வேறுபாடுகளை அடக்கமாகக் கையாளுங்கள்'

'இன, மத வேறுபாடுகளை அடக்கமாகக் கையாளுங்கள்'

2 mins read
72467458-0bd9-4a4c-8e75-4477e1f009a8
தேசிய பல்கலைக் கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோருடன் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கலந்துரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்­க­ளுக்­கி­டை­யி­லுள்ள வேறு­பா­டு­களை அடக்­கத்­து­டன் பொறு­மை­யா­க­வும் அன்­பா­க­வும் கையா­ளும் ஆற்­றல்­தான் சிங்­கப்­பூ­ரின் ஒற்றுமைக்கு வலு சேர்ப்­ப­தா­கத் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார். அதுவே சிங்­கப்­பூ­ரின் பெரும் பலங்­களில் ஒன்று என்­றும் திரு ஹெங் சொன்­னார்.

குறிப்­பாக மக்­க­ளின் உணர்­வு­களைத் தூண்­டக்­கூ­டிய இனம், மதம் சார்ந்த விவ­கா­ரங்­க­ளைப் பற்­றிப் பேசும்­போது இந்த அம்­சம் பொருந்தும் என்­பதை அவர் சுட்­டி­னார்.

"இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளைப் பொறுத்­த­வரை நமக்கு மாறு­பட்ட கருத்­து­கள் இருப்­ப­தோடு அவற்றைக் கையாள வெவ்­வேறு அணு­கு­மு­றை­கள் இருக்­கும் என்பதை­யும் நாம் கருத்­தில்­கொள்­ள­வேண்­டும்," என்று சிங்­கப்­பூ­ரின் வருங்­கா­லத்தை வடி­வ­மைப்­ப­தன் தொடர்­பில் தேசி­யப் பல்­க­லைக் கழ­கம் ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யா­ட­லில் திரு ஹெங் சொன்­னார்.

தங்­க­ளி­டம் இருக்­கக்­கூ­டிய பாரபட்­ச­மான கருத்­து­க­ளை­யும் இனம் போன்ற விவ­கா­ரங்­க­ளின் தொடர்­பில் தவ­ற­வி­டக்­கூ­டிய அம்சங்­க­ளை­யும் கண்­ட­றிந்து அவற்­றைத் திருத்­திக்­கொள்ள அடக்­க­மாக இருக்­கு­மாறு அவர் சிங்கப்பூரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்டார்.

இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளைப் பற்­றிப் பிற­ரு­டன் பேசும்­போது மக்கள் பொறு­மை­யா­க­வும் ஒரு­வருக்­கொ­ரு­வர் அன்­பா­க­வும் நடந்து­கொள்­ள­வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

"ஒரே கருத்தை வலியுறுத்திச் சொல்வதால் முன்னேற்­றம் காணமுடி­யாது. அதற்குப் பதி­லா­கப் பல்­வேறு கோணங்­களை ஆராய்ந்து அவற்றை ஒன்­று­சேர்ப்­ப­தற்­கான வாய்ப்பை அதி­க­ரிக்­கும் முயற்­சி­யில் இறங்­க­வேண்­டும்," என்­றார் அவர்.

அண்­மை­யில் நிகழ்ந்த சில சம்பவங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கம் தொடர்­பில் அதி­க­மா­கப் பேசப்­பட்­ட­தைச் சுட்­டிய துணைப் பிர­த­மர், இந்த அம்­சத்­தில் சமூ­க­மாக இன்­னும் சிறந்து விளங்க சிங்­கப்­பூ­ரர்­கள் எண்­ணம் கொண்டுள்­ள­தா­கச் சொன்­னார்.

சுதந்­தி­ர­ம­டைந்த காலத்­தில் சிங்கப்­பூர் எதிர்­கொண்ட குழப்­பங்­களைப் பார்க்­காத இளை­யர்­கள் பொது­வாக நல்ல கல்­வி­யைப் பெற்­ற­வர்­கள் என்­றும் உலக நிகழ்­வு­க­ளை­யும் போக்­கு­க­ளை­யும் நன்கு அறிந்­த­வர்­கள் என்­றும் திரு ஹெங் குறிப்­பிட்­டார். அவர்­கள் பொது­வாக இனம், மதம் சார்ந்த கருத்­து­களை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­யப்­ப­டுத்­தத் தயங்­கு­வ­தில்லை என்­றும் அவர் கூறி­னார். குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் அவர்­கள் கருத்து­களை அதி­க­மா­கத் தெரிவிப்பதை அவர் சுட்­டி­னார்.

"நாம் இது­வரை கட்­டிக்­காத்­து­வ­ரும் ஒற்­றுமை உணர்வு உங்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் திரு ஹெங்.

இது­போன்ற விவ­கா­ரங்­களை, தொடர்ந்து அடக்­கத்­து­டன் பொறுமை­யா­க­வும் அன்­பா­க­வும் அணு­கி­னால் இளை­யர்­க­ளால் சிங்கப்­பூ­ரின் ஒற்­றுமை உணர்வை மேலும் வளர்க்­க­மு­டி­யும் என்ற நம்பிக்­கை­யைக் கொண்­டுள்­ள­தாகத் திரு ஹெங் கூறி­னார்.