சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானங்களைக் கொண்ட சுமார் 700 போத்தல்களை சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல்செய்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்ற வாரம் நடத்தப்பட்ட சோதனைகளில் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடோ க்நார்த் ஸ்ட்ரீட் இரண்டில் உள்ள சிங்கப்பூர் வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். வாகனத்தின் பின் கூடத்தில் சட்டவிரோத மதுபானத்தைக் கொண்ட 60 போத்தல்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு கேன்பரா ரோட்டில் இருந்த அந்த வாகனத்தின் 42 வயது ஓட்டுநரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு மேலும் 300 போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதற்குப் பின்னர் உட்லண்ட்ஸ் ஈஸ்ட் தொழில்துறை பேட்டையில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானம் கொண்ட மேலும் 313 போத்தல்களும் 34 கனரகபோத்தல்களும் இரண்டு வாளிகளும் பறிமுதல்செய்யப்பட்டன. மதுபானம் தயாரிக்கத் தேவையான சில கருவிகளும் அங்கிருந்தன. உட்லண்ட்ஸ் ஈஸ்ட் தொழில்துறை பேட்டையில்தான் மதுபானம் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அங்கு சீனாவைச் சேர்ந்த ஒரு 47 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். சோதனைகளில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட மதுபானத்தைக் கொண்ட மொத்தம் 673 போத்தல்களும் 34 கனரகபோத்தல்களும் இரண்டு வாளிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆறாண்டு சிறைத் தண்டனையும் 5,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான வரியில் 40 மடங்கு தொகையைக் கட்டவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

