மூன்று தனிநபர்களுக்கும் ஐந்து அமைப்புகளுக்கும் காவல்துறை விருதுகள்

மூன்று தனிநபர்களுக்கும் ஐந்து அமைப்புகளுக்கும் காவல்துறை விருதுகள்

1 mins read
dc53a002-7e32-4e5f-b1b1-a352603efc8c
-
multi-img1 of 3

குற்­றச் செயல்­க­ளைத் தடுக்க உத­விய பொது­மக்­களில் மூவ­ருக்­கும் காவல்­து­றை­யி­ன­ரு­டன் இணைந்து செயல்­பட்ட ஐந்து அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 12 பேருக்­கும் கிள­மென்டி காவல்­துறை பிரிவு விரு­து­களை வழங்­கி­யுள்­ளது.

பொது­மக்­களில் மூவ­ருக்­குப் பொது­நல விருது வழங்­கப்­பட்­டது. பொது இடத்­தில் மான­பங்­கப்­படுத்தப்­பட்ட ஒரு­வ­ருக்கு உத­வி­யது, திரு­டர்­க­ளைப் பிடிக்க உதவி­யது போன்ற செயல்­க­ளுக்­காக அவர்­கள் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னை­யில் மூத்த பாது­காப்பு அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரி­யும் திரு சாமி­நா­தன் தின­க­ரன் தனி­நபர் விரு­து­க­ளை வென்றோரில் ஒரு­வர்.

கழி­வ­றை­யில் ரக­சி­ய­மாக ஒரு­வ­ரைத் தவ­றான கண்­ணோட்டத்­து­டன் பார்த்­த­வ­ரைப் பிடிக்க அவர் காவல்­து­றை­யினருக்கு உத­வி­னார்.

அதே­போல் குற்­றச் செயல்­களைத் தடுக்­கக் காவல்­து­றை­யி­ன­ருக்கு உத­விய அமைப்­பு­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

ஜூரோங் வட்­டா­ரத்­தில் அமைந்துள்ள சில 'செவன்-இலெவன் (7-11)' கடை­கள் அவற்­றில் அடங்­கும்.

சமூ­கத்­தைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கப் பொது­ந­லத்­து­டன் நடந்­து­கொண்­ட­தற்­கா­கக் காவல்­துறை துணை ஆணை­ய­ரும் கிள­மென்டி காவல்­துறை பிரி­வின் தள­ப­தி­யு­மான மார்க் இ விருது வழங்­கி­யோ­ரைப் பாராட்­டி­னார்.

பொது­நல உணர்வு வலு­வா­க­வும் இன்­னும் பர­வ­லா­க­வும் இருந்தால் குற்­ற­வா­ளி­க­ளைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கும் அவர்­க­ளைக் குற்­றம் செய்­யா­மல் தடுப்­ப­தற்­கும் வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்று அவர் சுட்­டி­னார்.

விருது வென்றவர்களின் செயல்­கள் சமூ­கத்­தில் மற்­ற­வர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.